இதை எதிர்பாக்கல! தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு கிடைக்க போகும் ஆச்சரிய பரிசு! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு ஆச்சரிய பரிசு ஒன்று கிடைக்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதை எதிர்பாக்கல! தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு கிடைக்க போகும் ஆச்சரிய பரிசு! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்க பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவிற்கு (Neeraj Chopra), எக்ஸ்யூவி700 (XUV700) கார் பரிசாக வழங்கப்படும் என மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) நேற்று (ஆகஸ்ட் 7) அறிவித்துள்ளார். மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை.

இதை எதிர்பாக்கல! தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு கிடைக்க போகும் ஆச்சரிய பரிசு! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த கார், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரை தங்க மகன் நீரஜ் சோப்ரா பரிசாக பெறவுள்ளது சிறப்பு வாய்ந்த விஷயம் என்பதில் சந்தேகமில்லை. ஆனந்த் மஹிந்திரா சமூக வலை தளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக செயல்படக்கூடியவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இதை எதிர்பாக்கல! தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு கிடைக்க போகும் ஆச்சரிய பரிசு! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இந்த சூழலில் சமூக வலை தளங்களில் ஆனந்த் மஹிந்திராவை பின் தொடரும் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு பதில் அளித்த ஆனந்த் மஹிந்திரா, ''நமது தங்க மகனுக்கு எக்ஸ்யூவி700 காரை பரிசாக வழங்குவது தனிப்பட்ட முறையில் எனக்கு பெருமையும், கௌரவமும் அளிக்க கூடியது'' என தெரிவித்துள்ளார்.

இதை எதிர்பாக்கல! தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு கிடைக்க போகும் ஆச்சரிய பரிசு! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

அத்துடன் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெஜூரிகர் மற்றும் ஆட்டோமேட்டிவ் டிவிஷன் தலைமை செயல் அதிகாரி வீஜே நாக்ரா ஆகியோரை 'டேக்' செய்துள்ள ஆனந்த் மஹிந்திரா, நீரஜ் சோப்ராவிற்காக ஒரு மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை தயாராக வைத்திருக்கும்படியும் கேட்டு கொண்டுள்ளார்.

இதை எதிர்பாக்கல! தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு கிடைக்க போகும் ஆச்சரிய பரிசு! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

டோக்கியோ நகரில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக் தடகள போட்டிகளில் இந்தியாவின் முதல் தங்க பதக்கம் இதுவாகும். எனவே நீரஜ் சோப்ரா வரலாற்று நாயகனாக பார்க்கப்படுகிறார். இந்த வெற்றியை இந்திய மக்கள் தற்போது உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இதை எதிர்பாக்கல! தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு கிடைக்க போகும் ஆச்சரிய பரிசு! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இங்கே மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மற்றொரு பயனர் நீரஜ் சோப்ராவிற்கு ஏதேனும் ஒரு எக்ஸ்யூவி700 காரை வழங்குவதற்கு பதிலாக முதல் எக்ஸ்யூவி700 காரை வழங்க வேண்டும் என ஆனந்த் மஹிந்திராவிடம் கேட்டுள்ளார். இதற்கு ஆனந்த் மஹிந்திரா 'நாங்கள் கேட்கிறோம்' என பதில் வழங்கியுள்ளார்.

இதை எதிர்பாக்கல! தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு கிடைக்க போகும் ஆச்சரிய பரிசு! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

விளையாட்டு போட்டிகளில் சாதிப்பவர்களுக்கு கார்களை பரிசாக வழங்குவதை மஹிந்திரா நிறுவனம் எப்போதுமே வாடிக்கையாக வைத்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் உள்ளிட்ட இந்திய அணி வீரர்களுக்கு ஆனந்த் மஹிந்திரா புதிய தலைமுறை தார் எஸ்யூவி காரை பரிசாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை எதிர்பாக்கல! தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு கிடைக்க போகும் ஆச்சரிய பரிசு! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இந்த வரிசையில் தற்போது நீரஜ் சோப்ராவிற்கு பரிசாக வழங்கப்படவுள்ள எக்ஸ்யூவி700 கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், இந்திய சந்தையில், ஹூண்டாய் அல்கஸார், புதிய டாடா சஃபாரி மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் உள்ளிட்ட கார்களுடன் போட்டியிடவுள்ளது.

இதை எதிர்பாக்கல! தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு கிடைக்க போகும் ஆச்சரிய பரிசு! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்கும். இந்த காரின் அறிமுகம் தொடர்ந்து தாமதமாகி கொண்டே வருகிறது. இதற்கு உலக அளவில் செமி கண்டக்டர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையும் ஒரு காரணம். செமி கண்டக்டர்கள் பற்றாக்குறையால் உலகின் பல்வேறு நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதை எதிர்பாக்கல! தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு கிடைக்க போகும் ஆச்சரிய பரிசு! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

வால்வோ நிறுவனம் கூட தனது எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதை தற்போது ஒத்தி வைத்துள்ளது. முன்னதாக வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய சந்தையில் நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வால்வோ நிறுவனம் தற்போது இந்த காரின் அறிமுகத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளது.

இதை எதிர்பாக்கல! தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு கிடைக்க போகும் ஆச்சரிய பரிசு! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

எனவே 2022ம் ஆண்டில்தான் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. முன்னதாக மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை தார் எஸ்யூவி காரின் உற்பத்தி பணிகள் கூட, செமி கண்டக்டர்கள் பற்றாக்குறையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை எதிர்பாக்கல! தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு கிடைக்க போகும் ஆச்சரிய பரிசு! என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

ஆனால் மஹிந்திரா நிறுவனம் தற்போது எக்ஸ்யூவி700 காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தீவிரமாக உள்ளது. இதுதவிர புதிய தலைமுறை ஸ்கார்பியோ காரையும் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Sunday, August 8, 2021, 11:35 [IST]
English summary
Businessman anand mahindra will gift xuv700 suv to tokyo olympics gold medalist neeraj chopra
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+