அதிவேகமாக வந்த காருடன் நேருக்கு நேர் மோதி சாலையில் தூக்கிவீசப்பட்ட பைக்... (வீடியோ)
அதிவேகமாக வந்த காருடன் நேருக்கு நேர் மோதி சாலையில் தூக்கிவீசப்பட்ட பைக்... (வீடியோ)
Recommended Video

அதிவேகம் ஆபத்தானது. இது வாகன பயன்பாட்டில் மட்டுமில்ல, மனிதனுடைய எல்லா நிலைகளிலும் இந்த வார்த்தை மிக பொருத்தமாக இருக்கும்.

ஆனால் நாம் இந்த சொல்லை, சாலையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தோடு தான் இணைத்து பார்க்கவுள்ளோம். அதன் விவரங்கள் பின்வருமாறு.

கேரளாவில் நடைபெற்ற ஒரு விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிவேகம் ஆபத்தாக மாறும் அந்த நிமிடம் பார்க்கும் நமக்கும் சிலிர்ப்பை எடுத்துவதாக உள்ளது.

கேரளாவின் கருணாகரபள்ளி என்ற இடத்தில் நடைபெற்ற இந்த விபத்தின் முழு காட்சிகளும் அருகில் டயர் கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவியாகியுள்ளது.

அந்த காட்சிகளை சரத்குமார் என்பவர் தனது யூ-டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஹேட்ச்பேக் மாடல் கார், எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதும் போது, பைக்கில் இருந்த இருவரும் சேர்ந்து தூக்கி வீசப்பட்டனர்.
Trending On Drivespark:
பைக்குடன் மோதிய கார், சில நிமிடங்கள் சுழன்று பிற்கு அருகிலிருக்கும் சைக்கிள் ரிக்ஷாவில் இடித்து நிற்கிறது. பெரும் விபத்தை சந்தித்த இந்த கார் மாருதி ஆல்டோவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த சாலை விபத்தில் தூக்கி வீசப்பட்ட இரு பைக் ஓட்டிகளும், படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என கேரளாவின் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சிசிடிவி காட்சிகளை பார்க்கும் போது, காரின் அதிவேகத்தின் சென்றால் தான் இந்த பெரும் விபத்து நடந்துள்ளது. மேலும் அதனால் தான் பைக் ரைடர்களும் காயமடைந்துள்ளனர்.

இருவழி சாலையான அதில், டிவைடர்கள் இல்லை. அதனால் எதிரே இருந்த லேனில் பைக் வந்த போது, அதிவேகமாக வந்த ஹேட்ச்பேக் கார் ஒட்டுநர் கட்டுபாட்டை இழந்துள்ளார்.

அடுத்த லேனில் மாறுவதற்கு காரின் ஸ்டீயரிங்கை திருப்ப, அதிவேகத்தில் சென்றுக்கொண்டு இருந்த காரணத்தினால் கார் கட்டுபாட்டை இழக்கிறது.

இதற்கிடையில் ஒரு ஆட்டோ ரிக்ஷாவும் மற்றும் மற்றொரு பைக்கும் காரின் செயல்பாட்டை கொண்டு சுதாரித்துக்கொள்ள, எதிரே வந்த ஒரு பைக் அந்த காருடன் நேருக்கு நேராக மோதி விடுகிறது.
Trending On Drivespark:
இருவழி லேன் கொண்ட சாலையில் வாகனங்களை எப்போதுமே அதிவேகத்தில் இயக்கக்கூடாது. இதை பின்பற்றாமல் விட்டால் பிறகு விபத்தில் தான் முடியும்.

எந்த லேனில் செல்கிறோம் என்பது தெரியாமல், அதிவேகத்தில் காரில் செல்வதால் எதிரே வாகனம் வரும் போது வேறு வழிக்கு காரை செலுத்துவதில் குழப்பம் ஏற்படும்.

அது போன்ற ஒரு நிலை இங்கு ஏற்பட்டதால் தான், கேரளாவின் கருணாகரபுரத்தில் இப்படி விபத்து ஏற்பட்டு பைக் ஓட்டிகளுக்கு படுகாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் அல்லது வாகன ஓட்டிகளின் செயல்பாடு அதிகமாக உள்ள சாலைகளில் டிவைடர்கள் வைக்கப்படுவதில்லை. அதனால் தான் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டு, அங்குள்ள சூழலை பரபரப்பு கொள்ளச்செய்துள்ளது.

அதிவேகம் ஆபத்தானது என்பதற்கு ஏற்ற சம்பவமாக கேரளாவில் நடைபெற்றுள்ள இந்த விபத்து இருக்கிறது. அதிவேகமாக கார் அல்லது பைக்குகளில் செல்பவர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்.

நீங்கள் உங்களது வாழ்க்கையுடன் சேர்த்து மற்றவர்களின் வாழ்க்கையையும் பணையம் வைக்கிறீர்கள். அதிவேகமாக வாகனத்தை இயக்க விரும்புபவர்கள் கொஞ்சம் சிந்தித்து செயல்பாட்டால் எல்லாம் இன்பமாக மாறும்.


Click it and Unblock the Notifications