Just In
- 2 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 4 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 6 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 7 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...
சாகசம் செய்தவாறு சென்ற இருசக்கர வாகன ஓட்டியை, அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள எலெக்ட்ரானிக் சிட்டியின் மேம்பாலத்தில் அரங்கேறியதாக ஓர் விபத்துகுறித்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆனால், இந்த சம்பவம் அங்குதான் நடைபெற்றது என்பதற்கான உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இருப்பினும், யுடியூப், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த கோரமான விபத்து சம்பவம் பெங்களூருவிலேயே நடைபெற்றதாக தகவல்கள் பரவிய வண்ணம் இருக்கின்றது.
வீடியோவில், ஓர் இளைஞர் தான் ஆபத்தில் இருக்கின்றோம் என்பதை உணராமல், இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்தவாறு நீண்ட தூரம் பயணித்து வருகின்றார். தொடர்ந்து, அடுத்த சாகசத்தில் ஈடுபடுவதற்காக வீலிங் செய்தவாறு பைக்கில் இருந்தபடியே எழும்புகின்றார்.
அந்த நேரத்தில், அதே சாலையில் அதிவேகமாக சீறிப் பாய்ந்து வந்த கார் ஒன்று, இரு சக்கர வாகனத்தின்மீது வந்த வேகத்திலேயே மோதியது. இதில், பைக் எங்கு சென்றது என்றே தெரியவில்லை. ஆனால், மறுபுறம் காரில் இருந்தவாறு இந்த சம்பவம் அனைத்தையும் படம்பிடித்துக் கொண்டிருந்த காருக்கு அருகில் பைக்கின் ஒரு சில பாகங்கள் வந்து விழுவதை மட்டும் நம்மால் காண முடிகின்றது.
அதேசமயம், இந்த சம்பம் ஓர் மேம்பாலத்தின்மீது நடைபெற்றிருப்பதையும் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் உறுதி செய்கின்றன.
இந்த சம்பவம் அனைத்தும் கண் இமைக்கும் நேரத்திலேயே அரங்கேறிவிடுகின்றது. இந்த விபத்தில் பைக்கர் மற்றும் காரில் பயணித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதுகுறித்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த கோரச் சம்பவம் பைக்கரின் அஜாக்கிரதை மற்றும் காரின் அதிவேகமே முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், அந்த சாலை முழுவதும் கடும் இருட்டாக இருந்ததும் மற்றுமொரு காரணமாக பார்க்கப்படுகின்றது.
சாலையில் இதுபோன்று சாகசத்தில் ஈடுபடுவது எப்போதும் ஆபத்தையே விளைவிக்கும். அதனை வாகன ஓட்டிகளுக்கு கடுமையாக எடுத்துக்காட்டும் வகையிலேயே இந்த வீடியோ அமைந்துள்ளது.
அண்மையில்கூட ஓர் இளைஞர் இதுபோன்று இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ததற்காக போலீஸாரின் பிடியில் சிக்கினார். மேலும், இதுபோன்று பொதுவெளியில் சாகசத்தில் ஈடுபடுவதை இந்திய மோட்டார் வாகன சட்டம் கடுமையாக எதிர்க்கின்றது.
தொடர்ந்து, இதுபோன்று விதிமீறல்களில் ஈடுபடுவோர்களுக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதத்தை வழங்க புதிய மோட்டார் வாகன சட்டம் 2019ம் வழி வகைச் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இதுவரை இல்லாத அளவில் அபராதங்கள் கடுமையாக விதிக்கப்பட்டு வருகின்றது.
பெங்களூர் நகரில் நடைபெற்றதாக பரவி வரும் கோரமான விபத்து காட்சியை நீங்கள் கீழே காணலாம்.
அவ்வாறு விதிக்கப்படும் அபராதங்கள் சில நேரங்களில் வாகனங்களின் விலையைக் காட்டிலும் அதிகமானதாக காட்சியளிக்கின்றது.
இந்த உச்சபட்ச அபராத திட்டமானது, இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் வாகன விபத்துகளே இல்லாத நாடாக மாற்றும் வகையில் மத்திய அரசு இதனை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்த புதிய அபராதத் திட்டம் பெரும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளது.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?