Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மோசடி வழக்கில் பிரபல கார் டிசைனர் திலீப் சாப்ரியா அதிரடி கைது!
பிரபல கார் டிசைனர் திலீப் சாப்ரியா மோசடி வழக்கு ஒன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் பிரபல நடிகர்கள் பயன்படுத்தும் கேரவன் வாகனங்கள் மற்றும் கார்களை சொகுசு வசதிகளுடன் ஆடம்பரமாக மாற்றித் தருவதில் டிசி டிசைன் நிறுவனம் மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் உரிமையாளர் திலீப் சாப்ரியா கார் வடிவமைப்புத் துறையில் நெடிய அனுபவம் வாய்ந்தவர்.

மும்பையில் டிசி டிசைன் நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் கார் கஸ்டமைஸ் செய்து தரும் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சொந்தமாக ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிக்கும் பணியிலும் டிசி டிசைன் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், டிசி டிசைன் நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சாப்ரியா மோசடி வழக்கு ஒன்றில் மும்பை குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசாரால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது 420, 465, 467, 468, 471, 120(B) மற்றும் 34 உள்ளிட்ட மோசடி மற்றும் ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவது தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அவரது விலை உயர்ந்த கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் மும்பை மாநகர தலைமை அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ந் தேதி திலீப் சாப்ரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இந்த வழக்கு யார் தொடுத்தார்கள், என்ன பிரச்னை என்பது உள்ளிட்ட விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

கடந்த 2013ம் ஆண்டு தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் காரை ரூ.5 லட்சம் தொகையை செலுத்தி முன்பதிவு செய்துள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் கார் டெலிவிரி கொடுக்கப்படவில்லை என்று கூறி, டிசி நிறுவனத்தின் மீது மோசடி புகார் அளித்தது நினைவிருக்கலாம்.