கேரளாவில் பஸ் மீது வேகமாக வந்து மோதிய கார் விபத்தின் பதறவைக்கும் வீடியோ வெளியானது
கேரளாவில் பஸ் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்திற்குள்ளான பதற வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் யார் மீது தவறு உள்ளது? காரில் இருந்தவருக்கு என்ன ஆனது?
இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான விபத்துக்கள் கவனக்குறைவாலேயே நடக்கிறது. இந்தியர்கள் பெரும்பாலும் வாகனம் ஓட்டும் போது தனது முழு கவனத்தையும் அதில் செலுத்துவதில்லை.

இவர்களின் கவனச்சிதறலால் சில நேரங்களில் உயிரைக்கூட இழக்கின்றனர். இவ்வாறாக கவனக்குறைவால் கேரளாவில் ஒரு விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து காட்சி அங்கிருந்த ஒரு சி.சி.டி.வி கேமராவிலும் பதிவாகியிருந்தது.

கேரளாவில் உள்ள ஒரு குறுகிய ரோட்டில் குறைந்த அளவிலான வாகனங்கள் சென்று வந்து கொண்டிருந்தன. அந்த வழியாக பஸ் ஒன்று வந்து கொண்டிருந்த போது திடீர் என பக்கவாட்டில் இருந்த வந்த கார் ஒன்று பஸ்ஸின் பின் பக்க வீல் பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த காட்சி சி.சி.வி.டி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை நீங்கள் கீழே காணலாம்.
இந்த காட்சியில் வேகமாக வந்து மோதும் கார் ரோட்டை கடக்கவோ அல்லது ரோட்டில் திரும்பவோ முயற்சித்திருக்கிறது. இந்த ரோடு மிகவும் குறுகிய ரோடாக இருப்பதால் அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் காரை நிறுத்தி ரோட்டின் இரண்டுபுறங்களிலும் வாகனங்கள் வருகிறதா என்பதை பார்த்து தான் காரை நகர்த்துவர்.

ஆனால் இந்த வீடியோவில் உள்ளபடி கார் வேகமாக ரோட்டிற்கு வருவதால் காரை புதிதாக யாராவது ஓட்டியிருக்க வேண்டும் அல்லது. காரில் பிரேக் பிடிக்காமல் போயிருக்க வேண்டும். கார் வந்த வேகத்தை கருத்தில் கொள்ளும் போது புதிதாக அல்லது கார் ஓட்ட தெரியாத யாரோ ஒருவர் தான் காரை ஓட்டியுள்ளார் என தெரிகிறது.

சிலர் கார் வரும் பகுதியின் இடதுபுறம் ஒரு ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. ஆந்த ஆட்டோ பஸ் வருவதை மறைத்திருந்திருந்திருக்கலாம் என சில கூறுகின்றனர். அவ்வாறாக இருந்தாலும் காரின் வேகத்தை பார்க்கும் போது அதுதான் காரணமாக இருக்கும் என்ற முடிவிற்கு நம்மால் வர முடியவில்லை. சிலர் டிரைவர் பஸ்ஸின் வேகத்தை சரியாக கணிக்கவில்லை இதனால் தான் இந்த விபத்து எனவும் கூறிவருகின்றனர்.

அதே நேரத்தில் கார் வரும் பகுதிக்கு வலதுபுறத்தில் ஒரு ஜூப் ஒன்று பொருமையாக திருப்ப முயற்சித்து கொண்டிருந்ததையும் நீங்கள் இந்த வீடியோவில் பார்த்திருக்க முடியும். விபத்தில் சிக்கிய காரின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது.

நல்ல வேலையாக பஸ்சிற்கு எதிர்புறத்தில் இருந்து எந்தவாகனமும் வரவில்லை இல்லை என்றால் இந்த இடத்தில் பெரும் கோர விபத்தே நடந்திருக்கும். தற்போது நடந்த விபத்தில் உயிரிழப்புகள் எதேனும் நடந்ததா காரை ஓட்டிய டிரைவர் யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த விபத்து கார் ஓட்டும் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. காரில் ரோட்டை கடக்கும் போது அல்லது சந்திப்பு ரோடுகளை கடக்கும் போதோ நிச்சயம் சுற்றிலும் பார்த்து விட்டு ஏதேனும் வாகனம் வருகிறதா என்பதை பார்த்து விட்டு திரும்ப வேண்டும்.

டிராபிக் சிக்னலிலும் பச்சை நிறம் எரிந்தாலும் மற்ற பகுதிகளை கவனித்து விட்டு செல்வது நல்லது. மற்றவர்கள் செய்யும் தவறு கூட உங்களுக்கு பாதகமாக அமையலாம்.


Click it and Unblock the Notifications