Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டியிருந்தால் கடும் நடவடிக்கை... காவல் துறை புதிய உத்தரவு... என்னனு தெரியுமா?
வாகனங்களில் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் ஸ்டிக்கர்களை ஒட்டியிருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகனங்களில் ஸ்டிக்கர்கள் வாயிலாக சாதிய அடையாளங்களை வெளிப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஹரியானா மாநிலம் குர்கான் காவல் துறையினர் அறிவித்துள்ளனர். இந்த விதிமீறல் கண்டறியப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல் துறை வெளியிட்டுள்ள புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கும் வகையில், இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர். இந்த புதிய உத்தரவு தொடர்பான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே போக்குவரத்து காவல் துறையினருக்கு வழங்கப்பட்டு விட்டது. எனவே அவர்கள் உடனடியாக நடவடிக்கையை தொடங்கவுள்ளனர்.

வாகனங்களின் எந்த பகுதியிலும் சாதிய அடையாளங்களை ஸ்டிக்கர்கள் மூலம் வெளிப்படுத்தக்கூடாது. குறிப்பாக நம்பர் பிளேட்டில் அத்தகைய ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ''நாங்கள் சோதனை செய்யும் ஒவ்வொரு 20 வாகனங்களிலும் ஒரு வாகனம் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் ஸ்டிக்கர்களுடன் வருகிறது'' என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே வாகனங்களில் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்துவதை தடுப்பதற்காகவும், நீதிமன்றத்தின் உத்தரவை முறையாக அமல்படுத்துவதற்காகவும், குர்கான் காவல் துறையினர் சிறப்பு வாகன தணிக்கையை நடத்தவுள்ளனர். கார், மோட்டார்சைக்கிள் உள்பட எந்தவிதமான வாகனத்திலும், எந்த வகையிலும் சாதிய அடையாளங்களை வெளிக்காட்டும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்க கூடாது.

இந்த உத்தரவை மீறினால், வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சாலையில் தங்கள் சமூக அந்தஸ்தை வெளிக்காட்டுவதற்காக வாகன உரிமையாளர்கள் இந்த காரியத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் எவ்வளவு அபராதம் விதிக்கவுள்ளனர்? என்ற தகவல் வெளியாகவில்லை.

ஆனால் இந்த பிரச்னை குர்கானில் மட்டுமல்லாது, கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. வாகனங்களின் நம்பர் பிளேட்கள், விண்டு ஸ்க்ரீன்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் ஸ்டிக்கர்களை வாகன உரிமையாளர்கள் பலர் ஒட்டி வருகின்றனர்.

எனவே அத்தகைய வாகன உரிமையாளர்கள் மீது தற்போது நாடு முழுவதும் படிப்படியாக நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குர்கான் காவல் துறையினருக்கு முன்னதாகவே, உத்தர பிரதேச மாநில காவல் துறையினர், அத்தகைய வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கி விட்டனர். உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த விதிமுறை மீறலுக்காக ஏற்கனவே பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் நாட்களில், இந்தியாவின் மற்ற பகுதிகளை சேர்ந்த காவல் துறையினரும், வாகனங்களில் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய ஸ்டிக்கர்கள் மற்ற வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தலாம் என்பதால், காவல் துறையினரின் நடவடிக்கை அவசியமாகிறது.
Note: Images used are for representational purpose only.