கோபக்கார பூனையால் சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய விமானம்... பாவம் அந்த பைலட்... என்ன நடந்தது?

கோபக்கார பூனையால் வானில் வட்டமடிக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே விமானம் மீண்டும் தரையிறங்கிய சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. சம்பவம்குறித்த மேலும் சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.

கோபக்கார பூனையால் சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய விமானம்... பாவம் அந்த பைலட்... என்ன நடந்தது?

கோபக்கார பூனை ஒன்றால் வானில் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களியே விமானம் ஒன்று தரையிறங்கியதாக வியத்தகு தகவல் ஒன்று இணையத்தில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றது. சூடான் நாட்டிலேயே இந்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

கோபக்கார பூனையால் சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய விமானம்... பாவம் அந்த பைலட்... என்ன நடந்தது?

கத்தாரின் தலைநகரான தோஹாவில் (Doha) இருந்து சூடான் தலைநகர் கர்டூம் (Khartoum)-க்கு சென்ற விமானமே கோபக்கார பூனையால் மீண்டும் புறப்பட்ட விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறங்கியிருக்கின்றது. சம்பவத்தின்போது பூனை ஒன்று காக்பிட் பகுதிக்குள் நுழைந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

கோபக்கார பூனையால் சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய விமானம்... பாவம் அந்த பைலட்... என்ன நடந்தது?

இதையறியாத பைலட்டுகள் விமானத்தை கர்டூம் நோக்கி பறக்க ஆரம்பித்திருக்கின்றனர். விமானம் வானில் பறக்க ஆரம்பித்த அரை மணி நேரத்தில், விமானத்திற்குள் பூனை இருப்பதை விமானிகள் உணர்ந்திருக்கின்றார். அதனை உடனடியாக வெளியேற்றவில்லை என்றால் நிலைமை சிக்கலாகிவிடும் என்பதை உணர்ந்த விமானி, சற்று சுறு சுறுப்பாக அதனை வெளியேற்ற ஆரம்பித்திருக்கின்றார்.

கோபக்கார பூனையால் சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய விமானம்... பாவம் அந்த பைலட்... என்ன நடந்தது?

ஆனால், பூனையே விமானி முகம் தெரியாத நபர் என்பதால் அவரை பதிலுக்கு தாக்க தொடங்கியிருக்கின்றது. இதில் விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்தே, பூனையை அப்புறப்படுத்துவதற்காக புறப்பட்ட இடத்திற்கே விமானிகள் மீண்டும் விமானத்தை தரையிருக்கின்றனர்.

கோபக்கார பூனையால் சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய விமானம்... பாவம் அந்த பைலட்... என்ன நடந்தது?

கடைசி வரை பூனை எப்படி காக்பிட் பகுதிக்குள் நுழைந்தது என்பது பற்றிய தகவல் யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து வழக்கு பதிந்த விமான நிலைய போலீஸார், சம்பவம்குறித்து தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். பூனையையும் தற்போது அவர்கள் (போலீஸார்) வசமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோபக்கார பூனையால் சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய விமானம்... பாவம் அந்த பைலட்... என்ன நடந்தது?

கோபக்கார பூனையால் விமானம் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய சம்பவம் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. தொடர்ந்து, நெட்டிசன்கள் சிலர் 'பூனையால் எமர்ஜென்சி லேண்டிங்கா!' என நக்கலடிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

கோபக்கார பூனையால் சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய விமானம்... பாவம் அந்த பைலட்... என்ன நடந்தது?

விமானத்தை பார்க் செய்திருந்தபோதோ அல்லது தூய்மைப்படுத்தும் போதோ பூனை விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என விமான நிலைய அதிகாரிகள் சிலர் தெரிவித்திருக்கின்றனர்.

கோபக்கார பூனையால் சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய விமானம்... பாவம் அந்த பைலட்... என்ன நடந்தது?

இச்சம்பவத்திற்கு முந்தைய தினம் இரவு ஹன்கர் விமான நிலையத்தில் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கே, பூனை விமானத்திற்குள் ஏறியிருக்கும் என்றும் அவர்கள் கூறினர். இருப்பினும், யாராலும் துள்ளியமான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, March 5, 2021, 17:36 [IST]
English summary
Cat makes Flight Emergency Landing In Khartoum International Airport. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+