Just In
- 1 hr ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 1 hr ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 2 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 4 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- News முஸ்லீம்.. ஹனுமான்.. லோக்சபா தேர்தலில் பிரச்சார ஸ்டைலை மாற்றிய மோடி.. பாஜக எடுத்த "அஸ்திரம்"
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?
நாட்டின் 6 மாநிலங்களில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படுகிறது.
நாட்டின் 6 மாநிலங்களில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படுகிறது. இந்த சூழலில் தமிழக அரசு வாட் வரியை குறைக்கும் பட்சத்தில், இங்கும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அனைத்து கண்களும் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே உற்று நோக்கி கொண்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.
இதுதவிர மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் அதிகப்படியான வரிகளும் பெட்ரோல், டீசல் ஆகியவை அதிக விலையில் விற்பனையாவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. தற்போதைய நிலையில் மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசுகளின் வாட் வரி என பல்வேறு வரிகள் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படுகின்றன.
எனவே பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் அதற்கும் மத்திய அரசு செவிமடுக்கவில்லை. எனவே மிக அதிகப்படியான விலையிலேயே பெட்ரோல், டீசல் விற்பனையாகி கொண்டுள்ளது.
இந்த சூழலில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று (அக்டோபர் 4) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்து வரும் கலால் வரியில் இருந்து லிட்டருக்கு 1.50 ரூபாய் குறைக்கப்படுகிறது.
இதுதவிர பெட்ரோல், டீசல் விலையில் இருந்து லிட்டருக்கு 1 ரூபாயை குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது'' என்றார். ஆக மொத்தம் பெட்ரோல், டீசல் விலையில் ஒரு லிட்டருக்கு 2.50 ரூபாய் குறைக்கப்படுகிறது. இந்த உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மேலும் கூறுகையில், ''விற்பனை வரி அல்லது வாட் வரிகளை குறைப்பதன் மூலமாக பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு மேலும் ரூ.2.50 வரை குறைக்கும்படி மாநில அரசுகளை, மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது'' என்றார்.
மத்திய அரசின் வலியுறுத்தலை ஏற்று உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், அஸ்ஸாம் மற்றும் திரிபுரா ஆகிய 6 மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் விலையை ஒரு லிட்டருக்கு மேலும் ரூ.2.50 குறைப்பதாக அறிவித்துள்ளன.
இதனால் இந்த 6 மாநிலங்களிலும், இன்று நள்ளிரவு முதல், பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ஒட்டுமொத்தமாக ரூ.5 குறைகிறது. இந்த 6 மாநிலங்களிலும் பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான ஜார்கண்ட் டீசல் விலையில் மட்டும் மேலும் 2.50 ரூபாயை குறைப்பதாக அறிவித்துள்ளது. எனவே அங்கு டீசல் விலை மட்டும் ரூ.5 குறைகிறது. ஆனால் ஜார்கண்ட் மாநில அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்கவில்லை.
எனவே மத்திய அரசு குறைத்த ரூ.2.50 மட்டுமே ஜார்கண்ட் மாநிலத்தில் அமலுக்கு வருகிறது. இதனிடையே பாஜக ஆட்சி செய்து வரும் இதர மாநிலங்களும், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பான அறிவிப்பை வெகு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் பாஜக ஆட்சி செய்யாத இதர மாநிலங்களின் நிலை குறித்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஆனால் இதில் கேரளா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க முடியாது என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக அரசு சமீபத்தில்தான் பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 வரை குறைத்தது. எனவே கர்நாடக அரசும் மேலும் விலையை குறைக்குமா? என்பது சந்தேகமே. இந்த விஷயத்தில் தமிழக அரசு என்ன முடிவு எடுக்க போகிறது? என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக தலைநகர் சென்னையில் இன்றைய நிலவரப்படி (அக்.4) ஒரு லிட்டர் பெட்ரோல் 87.33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசல் 79.79 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டுள்ளது.
மத்திய அரசு வரியை குறைத்துள்ளதால், இந்த விலையில் இருந்து ரூ.2.50 குறைவது உறுதியாகியுள்ளது. தமிழக அரசு தனது வரிகளை குறைத்து கொண்டால், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்த சூழலில் மத்திய அரசு விலையை குறைத்திருப்பது கண் துடைப்பு எனவும், பதற்றத்தில் எடுத்த முடிவு எனவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கலால் வரியை மிக அதிக அளவில் உயர்த்தி விட்டு, சற்று மட்டுமே குறைத்திருப்பதாக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
-
பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!