Just In
- 3 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 9 min ago ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மக்களை இதன் பக்கம் ஈர்க்க வேண்டுமாம்! இதற்காக மத்திய அரசு செய்ய இருக்கும் காரியம் - என்ன அது?
மின் வாகனங்களின் பக்கம் மக்களை ஈர்க்கும் வகையில் ஓர் அதிரடி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது என்ன தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க. வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள்களின் விற்பனை நிலையங்கள் மிக அதிக எண்ணிக்கையில் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்தளவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டில் இருந்திருந்தால் நாட்டில் எப்போதோ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கும்.
ஆமாங்க, தற்போது மின் வாகனங்களின் விற்பனை குழந்தை பருவத்திலேயே காட்சியளிக்கின்றது. இதற்கு, போதியளவில் மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாததே முக்கிய காரணம் ஆகும். குறிப்பாக, சார்ஜிங் மையங்கள் பெரியளவில் பயன்பாட்டில் இல்லாதது மக்களை அதன் பக்கம் நோக்கி நகர்வதை பயனற்று என சிந்திக்க வைத்திருக்கின்றது.
எனவேதான் மின் வாகனங்கள் மீது ஆசை இருந்தாலும் அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாத காரணத்தினால் அதனை வாங்க பலர் தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையைப் போக்க வேண்டும் என்பதில் தனியார் மற்றும் அரசுத்துறைகள் மிக அதிக தீவிரமாக இருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள சுமார் 69,000 எரிபொருள் விற்பனை நிலையங்களில் ஒரு இ-சார்ஜிங் கருவியை நிறுவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த தகவலை நேற்று (திங்கள்கிழமை) மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டிருந்தார். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தகவலை அவர் கூறியிருந்தார். இந்த திட்டம் நாட்டில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க உதவும் என நம்பப்படுகின்றது.
மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் மானியம் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகக் கூறிய அமைச்சர் நிதின் கட்கரி, இதன்மூலம் இரண்டு மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களின் விலை 30 சதவீதம் வரை குறைந்திருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பேட்டரி வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் மிகவும் முக்கியமானது. எனவேதான் குறைந்தது ஒரு சார்ஜிங் கருவியையாவது ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கிலும் நிறுவ வேண்டும் என அரசு நினைக்கின்றது. இதனடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 69 ஆயிரம் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு மின்சார வாகன சார்ஜிங் கருவியைப் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட இருக்கின்றது" என கூறினார்.
மேலும், "ஐந்து ஆண்டுகளில் இந்தியா உலகளாவிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக மாறிவிடும். இதனை கருத்தில் கொண்டு ஆட்டோமொபைல் துறையை, பெட்ரோல் அல்லது எத்தனால் / சி.என்.ஜி ஆகிய எரிபொருள்களைப் பயன்படுத்தி இயங்கும் பன்முக திறன் கொண்ட வாகனங்களை உற்பத்தி செய்யுமாறு" கேட்டுக் கொண்டார்.
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!