Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 8 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 8 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 11 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டெல்லி - ஹரியானா இடையே விரைவில் 'வாட்டர் டாக்சி' சேவை!
டெல்லி- ஹரியானா இடையே விரைவில் வாட்டர் டாக்சி சேவை துவங்கப்பட உள்ளது.
டெல்லி- ஹரியானா இடையில் படகு போக்குவரத்து துவங்குவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் நடந்து வருகின்றன. வரும் ஜுன் மாதம் முதல் படகு போக்குவரத்து சேவையை துவங்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
வஸீராபாத்- பல்லா ஆகிய இடங்களுக்கு இடையே யமுனை ஆற்றில் இந்த படகு போக்குவரத்து சேவையை துவங்கப்படுகிறது. இந்த படகு போக்குவரத்து மூலமாக இரு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு பயன்படும் என்பதுடன் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் அமையும்.
குறிப்பாக, வஸீராபாத் மற்றும் பதேபூர் ஜத் ஆகிய இடங்களுக்கு நீர் வழித்தடம் மூலமாக இணைப்பு கிடைக்க உள்ளது. இதனால், பரபரப்பு மிகுந்த சமயத்தில் சாலை மார்க்கமாக வருவதற்கு 3.5 மணிநேரம் பிடிக்கும் நிலையில், படகு சேவையின் மூலமாக வெறும் 45 நிமிடங்களில் சென்றுவிட வழி பிறக்க உள்ளது.
தேசிய உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையம் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த படகு போக்குவரத்துக்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. முதல் கட்டமாக 3 படகுகளை வாங்குவதற்கான நடைமுறைகளும் இறுதி கட்டத்தில் உள்ளன.
இந்த படகு போக்குவரத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்திடனம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் படகு போக்குவரத்து துவங்குவதற்கான அறிவிக்கை வெளியிடப்படும்.
வஸீராபாத் மற்றும் பல்லா இடையிலான 22 கிமீ தொலைவுக்கு 5 நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 3 நிறுத்தங்களுடன் இந்த படகு போக்குவரத்துக்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்த படகு போக்குவரத்தை தொடர்ந்து நீர் விளையாட்டுப் போட்டிகளை இதே பகுதியில் ஏற்படுத்துவதற்கான திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இதன்மூலமாக, சுற்றுலாத் துறை வெகுவாக மேம்படும்.
இதுதவிர, டெல்லி- ஆக்ரா இடையில் ஆக்ரா கால்வாய் திட்டத்தின் மூலமாக பயணிகள் படகு போக்குவரத்தை ஏற்படுத்தும் திட்டமும் மத்திய அரசின் வசம் உள்ளது. இதன்மூலமாக, சுற்றுலாத் துறை வெகுவாக மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவை எல்லாவற்றையும் விட சாலை மார்க்கத்தில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலும் சற்று தணியும் என்று நம்பப்படுகிறது. இதனிடையே, இந்த வழித்தடத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகள்!
மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள படத் தொகுப்பில் காணலாம்.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!