Just In
- 12 min ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 2 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 3 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 5 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
Don't Miss!
- Movies அடுத்த சத்குரு யார் என்பதில் தமன்னா, காஜல் பெயர் அடிபடுகிறதாம்.. என்னங்க பிரபலம் இப்படி சொல்லிட்டாரு?
- News டார்கெட் நம்பர் 2.. தமிழ்நாட்டில் பாஜக இறக்கிய ஆபரேஷன்.. இந்த 10 தொகுதிகளில்தான் ஆட்டமே மாற போகுதாம்
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்திய சாலைகளில் டபுள் டக்கர் பேருந்து பயன்பாட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்த இதுதான் காரணம்..!!
இந்திய சாலைகளில் டபுள் டக்கர் பேருந்து பயன்பாட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்த இதுதான் காரணம்..!!
இரண்டு அடுக்கு கொண்ட பேருந்துகள் இந்தியாவில் இயக்க மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து தமிழகத்தின் சில நகரங்களின் சாலை வழித்தடங்கள் ஆராயப்படவுள்ளன.
டபுள் டக்கர் என்கிற இரண்டு அடுக்கு கொண்ட பேருந்துகளை இந்தியா முழுவதும் இயக்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
பெட்ரோல் செலவை குறைக்கும் நோக்கில் இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பேருந்துகள் அனைத்தும் சொகுசு வசதிகளை கொண்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் சென்னை கோவைக்கு இடையே முதற்கட்டமாக அரசின் டபுள் டக்கர் பேருந்துகள் இயங்கும் என தெரிகிறது.
அதற்காக இந்த இரு நகரங்களுக்கு இடையே இரண்டு அடுக்கு பேருந்து பயன்பாட்டிற்கான ஆய்வு பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
சென்னை, கோவை போல இந்தியளவில் உள்ள மொத்தம் 75 நகரங்களில், இந்த இரண்டு அடுக்கு பேருந்தின் பயன்பாடு அமல்படுத்தப்படவுள்ளது.
Recommended Video
அதற்காக மங்களூரு - பெங்களூரு, கோழிக்கோடு - கொச்சி, ஜலந்தர் - ஸ்ரீநகர், டெல்லி - ஆக்ரா, லக்னோ - கோரக்பூர், மும்பை - வதோரோ போன்ற வழித்தடங்களும் தேர்வாகி உள்ளதாக தெரிகின்றன.
காலம் தாழ்த்தாமல், விரைவிலேயே இந்தியாவின் பெருநகரங்களுக்கு இடையே இரண்டு அடுக்கு பேருந்துகள் பயன்பாட்டிற்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகியுள்ளன.
இந்தியாவின் பல்வேறு மாநில போக்குவரத்து துறை அமைச்சர்களிடம், மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியும் இரண்டு அடுக்கு பேருந்திற்கான கட்டமைப்பு பணிகளை செய்ய துரிதப்படுத்தியுள்ளார்.
டபுள் டக்கர் பேருந்துகள் அமைக்கப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசின் சார்பில் நிதியுதவியும் வழங்கப்படும்.
இதுபோன்ற பேருந்துகள் இயக்கப்படும் போது, எரிவாயுவிற்கான தேவை குறைவதோடு, அதிக பயணிகள் பயணம் செய்வதால் அதிக லாபம் தரும் திட்டமாகவும் இது பார்க்கப்படுகிறது.
இரண்டு அடுக்கு பேருந்துகளை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில், மத்திய அரசிற்கு வேறொரு காரணமும் உள்ளது.
2017ல் நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் கார்களின் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதாவது கடந்த 2016ம் ஆண்டில் 30 கி.மீ கொண்ட தேசிய சாலைகளில் பேருந்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 45 சதவீதமாக இருந்தது.
இந்தாண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் அது 40 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் காரல் பயணம் செய்யப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதை குறைக்கும் நோக்கில் தான் நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்காக இரண்டு அடுக்கு பேருந்துகளை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.