Just In
- 1 hr ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 4 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சமூக விலகலை மீறினால் ஆப்பு... வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான அபராதம் அறிவிப்பு... எவ்ளோ தெரியுமா?
வாகனங்களில் சமூக விலகலை மீறுபவர்களுக்கான அபராத தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது கோர தாண்டவமாடி வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையிலும், கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
எனவே அன்றைய தினம் முதல் இந்தியாவில் பஸ், ரயில், விமானம் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அத்துடன் ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும் கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்குவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பயணங்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளால், இந்திய சாலைகள் வெறிச்சோடி போயின. ஆனால் ஊரடங்கு உத்தரவை மீறி ஒரு சிலர் வாகனங்களில் தேவையில்லாமல் வாகனங்களில் வலம் வர தொடங்கினர். அத்தியாவசிய பணிகள் இருப்பவர்கள் மட்டுமே வாகனங்களில் வரலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சிலர் தேவையில்லாமல் ஊர் சுற்றினர்.
அத்தகைய நபர்களின் வாகனங்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபாணியில் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான வாகனங்களை, ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆனால் தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் ரயில், விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆட்டோ, டாக்ஸிகளை இயக்குவதற்கும் நீண்ட இடைவெளிக்கு பின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. எனவே முன்பு போல வாகன போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால் வாகன போக்குவரத்திற்கு இவ்வளவு தளர்வுகள் வழங்கப்பட்டாலும் கூட, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என சண்டிகர் நிர்வாகம் அறிவித்துள்ளது. சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் சுகாதார துறை அறிவித்துள்ள உத்தரவின்படி, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள், அதற்குரிய வழிகாட்டுதல்களை மீறினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அதே சமயம் கடைகளின் உரிமையாளர்கள் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறினால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இதுதவிர வாகனங்களுக்கான அபராதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பேருந்துகளில் சமூக விலகல் விதிகளை மீறினால், 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதுவே கார்கள் என்றால், 2,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும்.
மேலும் ஆட்டோ/டூவீலர்கள் எனும் பட்சத்தில், ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் சமூக இடைவெளியை கடைபிடிப்பார்கள் என நம்புவதாக சண்டிகர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு தளர்வுகள் மூலம் பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், நீங்கள் அவசியம் இல்லாமல் வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காத வேகத்தில் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக மும்பை, சென்னை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. எனவே வீடுகளில் இருந்து தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்த்து விடுங்கள்.
Note: Images used are for representational purpose only.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?