அதிபயங்கர வேகத்தில் செல்லும் புதிய ஏரோடிரெயின்... விரைவில் ஜப்பானில் அறிமுகம்

சீனா மற்றும் ஜப்பான் நாட்டு வல்லுநர்கள் இணைந்து அதிவேகமாக செல்லக்கூடிய ஏரோடிரையின் என்ற புதிய ரக ரயலிலை வடிவமைமத்துள்ளனர். இது சுமார் 400-500 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Balasubramanian

இந்தியாவில் புல்லட் ரயிலை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் சீனா மற்றும் ஜப்பான் நாடுகள் அடுத்த கட்டமாக ஏரோடிரையின் என்ற புதிய ரக போக்குவரத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

அதிபயங்கர வேகத்தில் செல்லும் புதிய ஏரோடிரெயின்... விரைவில் ஜப்பானில் அறிமுகம்

சீனா மற்றும் ஜப்பான் நாட்டு வல்லுநர்கள் இணைந்து அதிவேகமாக செல்லக்கூடிய ஏரோடிரையின் என்ற புதிய ரக ரயலிலை வடிவமைமத்துள்ளனர். இது சுமார் 400-500 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிபயங்கர வேகத்தில் செல்லும் புதிய ஏரோடிரெயின்... விரைவில் ஜப்பானில் அறிமுகம்

இது நடைமுறைக்கு வந்தால் இந்தியாவின் ஒரு முனையான கன்னியாகுமரியில் இருந்து மறு மூனையான காஷ்மீருக்கு அதிக பட்சம் 8 மணி நேரத்தில் பயணம் செய்யலாம்.

அதிபயங்கர வேகத்தில் செல்லும் புதிய ஏரோடிரெயின்... விரைவில் ஜப்பானில் அறிமுகம்

இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களை சுமார் 1 மணி நேர பயண தூரத்தில் இது இணைத்து விடும் அளவிற்கு வல்லமை கொண்டது.

அதிபயங்கர வேகத்தில் செல்லும் புதிய ஏரோடிரெயின்... விரைவில் ஜப்பானில் அறிமுகம்

இந்த ரயில் முழுவதும் எலெக்டிரிக் சக்தியை கொண்ட இயக்கப்படும் என தெரிகிறது. இந்த ரயிலை முதற்கட்டமாக ஜப்பான் நாட்டில் உள்ள நாரிட்டா என்ற விமான நிலையத்திற்கும் ஹனிடா என்ற விமான நிலையத்திற்கு இடையே பயணிக்கும் விதமாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிபயங்கர வேகத்தில் செல்லும் புதிய ஏரோடிரெயின்... விரைவில் ஜப்பானில் அறிமுகம்

இந்த இரண்டு விமான நிலையங்களும் சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள நிலையில் இந்த தூரத்தை சில நிமிடங்களில் இந்த ரயில் கடந்து விடும். இது அப்பகுதியில் சோதனை முயற்சியாக மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது. சோதனை வெற்றியடையும் பட்சத்தில் இத்திட்டம் விரிவு படுத்தப்படும்.

அதிபயங்கர வேகத்தில் செல்லும் புதிய ஏரோடிரெயின்... விரைவில் ஜப்பானில் அறிமுகம்

இது குறித்து சீன தொழிற்நுட்ப கலைஞர் ஒருவர் கூறும் போது இந்த தொழிற்நுட்பத்திற்கான தயாரிப்பு மற்றும் சோதனைகள் ஏற்கனவே ஜப்பானில் வெற்றி கரமாக நடந்து முடிந்தது. தொடர்ந்து முழு ரயிலிலை தயாரிக்கும் பணி நடக்கிறது என கூறினார்.

அதிபயங்கர வேகத்தில் செல்லும் புதிய ஏரோடிரெயின்... விரைவில் ஜப்பானில் அறிமுகம்

மேலும் அவர் இந்த ரயில் வேகமாக மட்டும் அல்லாது இது ஒரு சதவீதம் கூட காற்றை மாசுபடுத்தாமல் செயல்படக்கூடியது எனவும் மேலும் இந்த ரயிலுக்கு தற்போது பயன்பாட்டில் உள்ள ரயிலுக்கு ஆகும் செலவை விட மூன்றில் ஒரு பங்கு செலவுதான் ஆகும் எனவும் இவர் கூறினார்.

அதிபயங்கர வேகத்தில் செல்லும் புதிய ஏரோடிரெயின்... விரைவில் ஜப்பானில் அறிமுகம்

இது குறித்து சீனாவில் உள்ள ஒரு பத்திரிக்கை படத்துடன் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன் படி மொத்தமே ஒரு மீட்டர் நீளம் உள்ள இந்த ரயில் புல்லட் ரயில் போன்ற முகப்பு தோற்றம் ரயில் நடுவில் விமானத்தில் உள்ளது போல மூன்று றெக்கைகளும் இருக்கிறது. இது வெறும் மாதிரிக்காக தயாரிக்கப்பட்ட ரயில் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிபயங்கர வேகத்தில் செல்லும் புதிய ஏரோடிரெயின்... விரைவில் ஜப்பானில் அறிமுகம்

இதில் பொருத்தப்பட்டுள்ள றெக்கைகள் இந்த ரயில் புல்லட் ரயிலைவிட 30 முதல் 40 மடங்கு வேகமாக செல்லும் போது அதன் நிலைதன்மையை உறுதி செய்தவற்காக பொருத்தப்பட்டுள்ளது.

அதிபயங்கர வேகத்தில் செல்லும் புதிய ஏரோடிரெயின்... விரைவில் ஜப்பானில் அறிமுகம்

இந்த ரயில் வரும் 2025 முதல் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது. இந்த ரயில் திட்டம் வெற்றி பெற்றால் உலகின் பல நாடுகள் இந்த ரயிலை திட்டத்தை போட்டி போட்டு அந்நாட்டில் செல்படுத்த துவங்கும். இந்தியாவிற்கு இந்த ரயில் அறிவிக்கப்பட்டால் எந்தெந்த ஊர்களுக்கு இடையே இயக்கப்படலாம் என கமெண்டில் தெரிவியுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Article Published On: Thursday, April 26, 2018, 18:15 [IST]
English summary
As Indian Railways eyes bullet trains, check out aerotrain that is set to speed at 500 kph!. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+