Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கின்னஸ் உலக சாதனை படைத்த சென்னை ஆட்டோ டிரைவர் ஜெகதீசன்!
இரண்டு சக்கரங்களில் ஆட்டோரிக்ஷாவை அதிக தூரம் ஓட்டி சென்று உலக சாதனை படைத்த சென்னையை சேர்ந்த ஜெகதீசனின் பெயர் 2016ம் ஆண்டு கின்னஸ் புத்தக பிரதியில் இடம்பெற இருக்கிறது.
மும்பையில், நடந்த இதற்கான நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனைக்காக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவை காட்டிலும், இரு மடங்கு கூடுதல் தூரத்தை அவர் கடந்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். அவரை பற்றியும், அவரது சாதனை பற்றியும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
ஆட்டோ ஓட்டுனர்
சென்னையை சேர்ந்த ஜெகதீசன் [27]ஆட்டோரிக்ஷா ஓட்டுனராக இருக்கிறார். சிறு வயது முதலே பைக் ஸ்டன்ட் செய்வதில் ஆர்வம் இருந்துள்ளது. இந்தநிலையில், ஆட்டோ ஓட்டுனராக மாறிய பின், ஆட்டோரிக்ஷாவிலும் தனது சாகச வித்தையை பயிற்சி செய்திருக்கிறார்.
பயிற்சி
பகலில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், இரவு நேரங்களில் மட்டும் ஆட்டோரிக்ஷாவை இரண்டு சக்கரங்களில் செலுத்தி பயிற்சி செய்திருக்கிறார். பல ஆண்டுகள் கடின பயிற்சிக்கு பின் இந்த உலக சாதனையை படைத்திருக்கிறார்.
கன்ட்ரோல்
மணிக்கு 80 கிமீ வேகத்தில் ஆட்டோரிக்ஷாவை செலுத்தி இவ்வாறு சாகசம் செய்வதாகவும், ஸ்டீயரிங் கன்ட்ரோலில்தான் இந்த வித்தைக்கான சூட்சுமம் இருப்பதாகவும் பெருமிதம் தெரிவிக்கிறார்.
கின்னஸ் சாதனை
இந்தநிலையில், தனது திறமையை கின்னஸ் சாதனை புத்தகத்தின் இந்திய அமைப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 17ந் தேதி மும்பை, ஜூகு பகுதியிலுள்ள விமான ஓடுதளத்தில் கின்னஸ் அதிகாரிகள் முன்பு அவர் தனது சாதனையை நிகழ்த்தி காட்டி அசத்தினார்.
கின்னஸ் நிபந்தனைகள்
குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் ஆட்டோ ரிக்ஷாவை இரண்டு சக்கரங்களில் செலுத்த வேண்டும். இடையில் ஒருமுறை கூட கீழே இறங்காமல், இரண்டு சக்கரங்களில் மட்டுமே முழுவதுமாக ஓட்ட வேண்டும் என்று கின்னஸ் சாதனை அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கின்னஸ் அமைப்பாளர்கள் வியப்பு
நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சமான ஒரு கிலோமீட்டர் தூரத்தைவிட, இரு மடங்கு தூரத்திற்கு தனது ஆட்டோரிக்ஷாவை இரண்டு சக்கரங்களில் செலுத்தியிருக்கிறார். அவர் 2.2 கிலோமீட்டர் தூரம் வெறும் இரண்டு சக்கரங்களில் ஆட்டோரிக்ஷாவை செலுத்தி, புதிய உலக சாதனை படைத்தார். இது கின்னஸ் நிர்வாகிகளையே அசர வைத்திருக்கிறது.
கின்னஸ் புத்தகத்தில் பெயர்
நான்காண்டுகளுக்கு முன்பு அவர் சாதனை படைத்துவிட்டாலும், முதல்முறையாக அவரது பெயர் 2016ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ
ஜெகதீசன் சாதனை படைத்த வீடியோவை ஸ்லைடில் காணலாம்.
முந்தைய ஸ்லைடில் உள்ள வீடியோ காட்சிகளில் சில இடங்களில் பொது சாலைகளில் ஆட்டோரிக்ஷா சாகசம் நடைபெறுவதாக அமைந்துள்ளது. அதனை டிரைவ்ஸ்பார்க் தளம் ஊக்குவிக்கவில்லை என்பதை தெரிவிக்கிறோம். பொது சாலைகளில் இதுபோன்ற சாகசங்களை செய்வதை கண்டிப்பாக தவிர்க்குமாறு டிரைவ்ஸ்பார்க் தளம் கேட்டுக்கொள்கிறது.
ஃபேஸ்புக் பக்கம்
டுவிட்டர் பக்கம்
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!