Just In
- 12 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 50 min ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Don't Miss!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
காஷ்மீரின் லே-லடாக் பகுதிக்கு சென்று திரும்பும் வழியில் சென்னை தம்பதி மீது துப்பாக்கிச்சூடு: காரணம்?
காஷ்மீரின் லே-லடாக் பகுதிக்கு சென்று திரும்பும் வழியில் சென்னை தம்பதி மீது துப்பாக்கிச்சூடு: காரணம் என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் சென்னையைச் சேர்ந்த இளம் தம்பதியரை மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராமாவரத்தில் உள்ள எல் & டி நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிபவர் ஆதித்யா (வயது 31) மற்றும் அவரின் மனைவி விஜயலட்சுமியும் (வயது 28), அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் புதிதாக திருமணம் செய்துகொண்டவர்கள். இருவரும் கடந்த ஜூன் 3ம் தேதி, காஷ்மீரில் உள்ள லே - லடாக் பகுதிக்கு சாகசப் பயணம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி சென்றனர். இவர்களுடன் ஆதித்யாவின் நண்பர் ஷ்யாம் தேஜாவும் உடன் சென்றார்.
டெல்லியிலிருந்து இரண்டு ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு லே-லடாக் பனிமலை சிகரங்களுக்கு பயணம் மேற்கொண்டனர் இருவரும்.
மோட்டார்சைக்கிள் பயண ஆர்வலர்கள் பலரும் 10,000 உயரம் கொண்ட லே-லடாக் பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் பயணம் மேற்கொள்வதை உச்சகட்டமாக கருதுகின்றனர்.
லே-லடாக் பயணம் முடிந்து நேற்று மாலை மோட்டார்சைக்கிளில் டெல்லி திரும்பிக்கொண்டிருந்தனர் தம்பதியர். உத்தரபிரதேச மாநிலம் முஷாபர்நகர் அருகே, தேசிய நெடுஞ்சாலை 58-ல் வந்துகொண்டிருந்தபோது, ஒரு துப்பாக்கி குண்டு ஆதித்யாவின் கழுத்தில் திடீரென்று பாய்ந்தது.
என்ன ஏதென்று நினைப்பதற்குள்ளாகவே ஆதித்யா குமார் வண்டியோடு கீழே சாய்ந்தார். இதில் அவரின் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதில் பின்னால் இருந்த அவர் மனைவிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேஜா, டெல்லி போலீசுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அங்கிருந்த சிலர் உதவியுடன் இரண்டு பேரையும் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமையில் சிகிச்சை பெற்று வரும் ஆதித்யா மற்றும் விஜயலட்சுமி இருவரும் ஆபத்தான கட்டத்தில் இருந்து தற்போது மீண்டுள்ளனர். ஹெல்மெட் அணிந்திருந்த இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாகவும், அவர்களின் வண்டி எண்ணை பார்க்கவில்லை என்றும் அவர்கள் நகை, பணம் உள்ளிட்ட எதையும் கேட்காமல் திடீரென துப்பாக்கியில் சுட்டதாக காவல்துறையினரிடம் விஜயலட்சுமி தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள நய்மண்டி காவல்நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபற்றி போலீசார் கூறும்போது, சம்பவம் குறித்து நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது தம்பதியரை சுடுவதற்கு முன்னர் 30 நிமிடங்களாக அந்த மர்ம மனிதர்கள் இருவரையும் தொடர்ந்து வந்தது தெரியவந்திருப்பதாக கூறினர்.
‘ஆள் மாறாட்டம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததா அல்லது கொள்ளையடிக்கும் நோக்கில் இந்தச் சம்பவம் நடந்ததா என்பது பற்றி விசாரித்து வருகிறோம்' என்று மேலும் கூறினர்.
முன்விரோதம் காரணமாக சுடப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெடுந்தொலைவு மோட்டார்சைக்கிள் பயணம் உற்சாகம் தருவதாக அமைந்தாலும், பல இன்னல்களையும், ஆபத்துகளையும் ஏற்படுத்தும் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!