Just In
- 49 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 3 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 4 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 5 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- News இந்தியக் குடியுரிமையைப் போராடிப் பெற்ற பெண்! நிஜத்தில் ஒரு ‘சர்க்கார்’ நாயகி!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ... ரொம்ப நாளா எதிர்பார்த்து இருந்தது!! இடையில் வரும் ஸ்டேஷன்ஸ் என்னென்ன?
சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் தாம்பரம் - வேளச்சேரிக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை இந்த பகுதியில் மெட்ரோ வழித்தடம் புதியதாக வந்தால் சென்னையின் எந்தெந்த பகுதிகளை இணைக்கும் என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
மெட்ரோ ரயில் சேவை, நம் நாட்டில் பலர் பரவலாக பயன்படுத்தும் போக்குவரத்தாக வேகம் கண்டு வரும் ஒன்று. தற்போதைக்கு சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் என 15 முக்கிய நகரங்களில் மட்டும் தான் மெட்ரோ ரயில் சேவை உள்ளது என்றாலும், அந்த நகரங்களில் போக்குவரத்திற்காக மக்கள் பலர் விரும்பி பயன்படுத்தும் சேவையாக இது மாறி வருகிறது. அதுமட்டுமில்லாமல் 15 என்ற எண்ணிக்கையும் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் நிலை உள்ளது.
உதாரணத்திற்கு மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபால், தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா மற்றும் பீகார் தலைநகர் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை துவங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேநேரம், ஏற்கனவே மெட்ரோ ரயில் சேவையை கொண்டுள்ள நகரங்களிலும் சேவை வழிதடங்களை விரிவுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. குறிப்பாக, பெங்களூர் & மும்பையில் சுமார் 100கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
அதேபோல், நம் சென்னை மெட்ரோ சேவையும் ஏறக்குறைய 84கிமீ-க்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதையெல்லாம் வைத்தும் பார்க்கும்போது டயர்-1 நகரங்களின் எதிர்கால பிரதான போக்குவரத்து மெட்ரோவை நம்பியே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய வழித்தடமாக தாம்பரம் - வேளச்சேரி இடையே சேவையை துவங்க கடந்த பல மாதங்களாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டு வந்தது.
ஆனால் தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ ரயில் வழித்தடத்தை அமைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், குறிப்பாக வழித்தடத்தை அமைக்க ஏதுவான பகுதிகளில் பொதுமக்கள் நுழைய தடை செய்யப்பட்ட இடங்களும், கட்டடங்களும் இருப்பதாக கடந்த ஜூன் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த வழித்தட சேவையை துவங்குவதை நிறுத்தி வைத்தது. சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான 2ஆம் கட்ட பணிகளில் ஒன்றாக இந்த வழித்தடம் உருவாக்கப்பட இருந்தது.
இவ்வாறு தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டம் வகுக்கப்பட்டு கிடப்பில் இருந்த நிலையில், தற்போது இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை கட்டமைப்பதற்கான ஆலோசனையில் மீண்டும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுப்பட ஆரம்பித்துள்ளனர். இதனால் விரைவில் தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னையிலும் முன்பு முடிவு செய்யப்பட்டு, பின்னர் மோனோ ரயில் சேவை நிராகரிக்கப்பட்டது. ஆனால் மோனோ ரயில் சேவைக்காக திட்டமிடப்பட்ட இடங்களில் தான் தற்சமயம் மெட்ரோ ரயில் சேவை நிறுவப்பட்டுள்ளது. இதன்படி பார்க்கும்போது, தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ ரயில் சேவை வந்தால், சேலையூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை மற்றும் மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடைப்பட்ட மெட்ரோ நிலையங்கள் நிறுவப்படும். இந்த வழித்தடத்தின் மொத்த தொலைவு 15.5கிமீ ஆக இருக்கும்.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உள்ளதை போன்று தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் உள்ளிட்ட மற்ற முக்கிய நகரங்களிலும் மெட்ரோ சேவையை துவங்கும் பணிகள் வரும் ஆண்டுகளில் துவங்கவுள்ளன. இதில் முதலாவதாக கோயம்புத்தூரிலேயே மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்கான இடம் பார்க்கும் வேலைகளில் ஏற்கனவே அதிகாரிகள் இறங்கிவிட்டனர் எனவும் நமக்கு கிடைத்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!