போக்குவரத்து காவல்துறை அலெர்ட்: வந்தாச்சு ஸ்வைப்பிங் மெஷின்... இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
போக்குவரத்து காவல்துறை அலெர்ட்: வந்தாச்சு ஸ்வைப்பிங் மெஷின்... இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..!!
இந்தியாவில் தமிழக தலைநகரான சென்னை, சாலை விபத்துகள் மற்றும் விதிமுறை மீறலில் முன்னிலை வகிக்கிறது.
அதனாலே பாதுகாப்பான சாலை பயணத்திற்கான பல்வேறு கெடுபிடிகள் சென்னை உட்பட தமிழகளவில் அதிகம்.

சாலை விதிமீறல்கள் தொடர்பான புகார்களில் பெரியளவில் சிக்குவது இருச்சக்கர வாகன ஓட்டிகள் தான். இது தமிழகம் மட்டுமில்லாமல், ஏனையை நகரங்களிலும் இதே நிலமை தான்.

இதனால் ஹெல்மெட் கட்டாயம், வேக கட்டுபாடு, வாகனத்திற்கான ஆவணங்கள் உள்ளிட்டவை தீவிர கண்காணிப்பிற்கு உள்ளக்காப்படுகின்றன.
Recommended Video


இருசக்கர வாகன ஓட்டிகளை கண்காணிக்கவே, சென்னையின் ஒவ்வொரு சிக்னல்களிலும் போக்குவரத்து போலீசார் பணியில் இருப்பதை பார்க்க முடியும்.

தற்போதைய நிலையில் கார் ஓட்டுநர்களும் பைக்கில் பயணிப்பவர்களுக்கு இணையான போக்குவரத்து விதிமீறலை செய்கின்றனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, சீட் பெல்ட் அணியாமல் செல்வது, வேக கட்டுபாடுகளை பின்பற்றாமல் இருப்பது, அதிக பாரம் ஏற்றுவது.
குடித்துவிட்டு காரை ஓட்டுவது தொடர்பான புகார்களும் இவர்கள் மீது எழத்தான் செய்கிறது. இதற்கான வழக்குகளும் பதிவாகி வருகின்றன.

அப்படி பதிவாகும் புகார்களுக்கும் மற்றும் விதிமுறை மீறுவோருக்கு, போக்குவரத்து போலீசார் குறிப்பிட்ட அபராதத் தொகையை விதித்து வசூலிக்கின்றனர்.

தவறு செய்து போலீசாரிடம் பிடிபட்டவர்கள் பணமாக தங்களது அபராதத் தொகையை செலுத்தி வந்தனர். ஆனால் நிலைமை இன்று அப்படி இல்லை.

டிஜிட்டல் மயமாகி வரும் இந்தியாவில் போலீசாரிடம் பிடிபடும் வாகன ஓட்டிகள் பெரும்பாலோனரிடம் ஏடிஎம் கார்டுகளே அதிகம் உள்ளன.
இதனால் போக்குவரத்து காவலர்கள் தொகையை வசூலிப்பத்தில் பெரிய சிக்கில்களை சந்தித்து வந்தனர்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரிடம் பணத்தை வசூலிக்க புதிய வழிமுறையை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை கையாள உள்ளது.

சென்னை அளவில் குற்றச்செயல்கள் நடைபெறும் பகுதிகளில் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்களிடம் முதற்கட்டமாக ஏடிஎம் கார்டு ஸ்வைப்பிங் இயந்திரங்கள் தரப்படுக்கின்றன.

இதற்காக எஸ்.பி.ஐ சார்பில் சுமார் 100 ஸ்வைப்பிங் இயந்திரங்கள் சென்னை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களை செய்து சிக்கினால், போக்குவரத்து காவலர்கள் இனி வரும் நாட்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்களிலிருந்து நேரடியாக அபராதத் தொகை வாகன ஓட்டிகளிடம் இருந்து பெற முடியும்.


Click it and Unblock the Notifications








