2 வாரத்தில் 3 லட்சம் பயணிகள்! தூள்... கிளப்பும் சென்னை சுரங்க மெட்ரோ!!
சென்னை வாசிகளை மெல்ல மெல்ல வசீகரிக்கிறது சென்னை சுரங்க மெட்ரோ சேவை. அதுகுறித்த தகவல்கள் இனி
ஆரம்ப நாட்களில் இது தேறவே தேறாது என்று நினைத்த சென்னை சுரங்க மெட்ரோ பயணத்திற்கு இன்று சென்னை வாசிகளிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்காக உயர்மட்ட மெட்ரோ சேவை, முதன் முதலாக 2015 ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

2 ஆண்டுகளுக்கு பிறகு 7.4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்க வழித்தடம் கடந்த 14ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள சென்னை மெட்ரோ கட்டுப்பாட்டு அறையிலிருந்து சுரங்க வழிப்பாதைக்கான மெட்ரோ சேவை இயக்கப்பட்டு வருகிறது.

உயர்மட்ட மெட்ரோ சேவைக்கு சென்னை வாசிகள் போதிய வரவேற்பு அளிக்காததால், சுரங்க மெட்ரோ சேவைக்கும் அதே நிலை எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சுரங்க மெட்ரோ சேவை தொடங்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு மக்களிடம் பெரியளவில் ஆர்வம் இல்லை.
ஆனால் அடுத்தடுத்த நாட்களில் சுரங்க மெட்ரோ நிலையங்கள் பொதுமக்கள் வரத்தால் அமளி துமளி ஆகிவிட்டன.

சென்னை சுரங்க மெட்ரோ சேவை ஆரம்பிக்கப்பட்ட 10 நாட்களில் (23ம் தேதி வரை), கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் பயன்படுத்தி உள்ளனர்.
மேலும், மெட்ரோ பயணங்களுக்காக வழங்கும் ஸ்மார்ட் கார்டுகளில் ஒன்று லட்சத்திற்கும் மேல் விற்பனை ஆகியுள்ளன.

சென்னையில் உயர்மட்ட நிலையங்கள் தொடங்கப்பட்ட போதும், என்னென்ன விதிமுறைகள் இருந்தனவோ அதே போன்று தான் மெட்ரோ சுரங்க வழி சேவைக்கும் பின்பற்றப்படுகின்றன.

தினந்தோறும் பயணத்திற்கு கருப்பு டோக்கன் பெறலாம். கூட்டத்தில் நின்று டிக்கெட் பெற விரும்பாதவர்களுக்கு ஒரு சேமிப்பு அட்டை வழங்கப்படுகிறது.

சேமிப்பு அட்டையின் மூலம் அவர்கள், ரூ.50 முதல் ரூ.100 வரை குறைந்தபட்ச கட்டணத்தை வைத்துக்கொண்டு மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம்.

மெட்ரோ கட்டணச் சேவைகளில் நேரு பூங்கா முதல் பரங்கி மலை வரை ஒருவருக்கு ரூ.45/- கட்டணம். நேரூ பூங்கா முதல் விமான நிலையம் வரை ரூ. 54/- கட்டணம்.
பேருந்துகளை போல, மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சிறப்பு சலுகைகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications