Just In
- 32 min ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 39 min ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 1 hr ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 2 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கைப்பையை திருடிய உடன் செய்த பலே காரியம்... பெண்ணின் சாமர்த்தியத்தால் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்
பெண்ணின் சாமர்த்தியத்தால் வழிப்பறி கொள்ளையர்கள் காவல் துறையினரிடம் சிக்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஊரடங்கு தீவிரமாக அமலில் இருந்த மார்ச் கடைசி மற்றும் ஏப்ரல் மாதங்களில், வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வரும் சூழலில், வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் மீண்டும் தலை தூக்கியுள்ளது.
இரு சக்கர வாகனங்களில் வரும் கொள்ளையர்கள் சாலையில் நடந்து செல்வோரிடம், சைக்கிள், பைக் ஆகிய வாகனங்களில் செல்வோரிடமும் கைவரிசையை காட்டி வருகின்றனர். இந்த வரிசையில் சென்னையில் ஒரு சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நினைவாற்றல் காரணமாக கொள்ளையர்கள் இருவர், காவல் துறையினரிடம் சிக்கி கொண்டுள்ளனர்.
சென்னை பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில், கடந்த சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 8) இந்த துணிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் பிரபாவதி என்ற பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தினமும் பணி முடிந்த பிறகு பிரபாவதி சைக்கிளில் வீடு திரும்புவது வழக்கம்.
இதன்படி கடந்த சனிக்கிழமையும் அவர் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அந்த சைக்கிளின் முன்பக்கம் இருந்த கூடையில், பிரபாவதி கைப்பையை வைத்திருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் இரண்டு பேர் அந்த கைப்பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்தனர்.
இதுகுறித்து உடனடியாக நீலாங்கரை காவல் நிலையத்தில் பிரபாவதி புகார் அளித்தார். இதன்பேரில் காவல் துறையினர் விசாரணையை ஆரம்பித்தனர். சம்பவ இடத்தில் இருந்த கடைகளில் சிசிடிவி கேமராக்கள் இருக்கும் என்பதால், அந்த பதிவுகளை கைப்பற்றி கொள்ளையர்களை பிடிக்கலாம் என காவல் துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.
ஆனால் ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டிருந்தது. எனவே காவல் துறையினரால் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய முடியவில்லை. எனவே விசாரணையில் தொய்வு ஏற்பட்ட நிலையில், பிரபாவதியின் நினைவாற்றல் காவல் துறையினருக்கு கை கொடுத்தது. கொள்ளையர்கள் வந்து சென்ற இரு சக்கர வாகனத்தின் பதிவு எண் பிரபாவதியின் மனதில் பதிந்து விட்டது.
அந்த பதிவு எண்ணை அவர் காவல் துறையினரிடம் தெரிவித்தார். இதன் மூலம் அந்த இரு சக்கர வாகனத்தின் உரிமையாளரை காவல் துறையினர் கண்டறிந்தனர். பதிவு எண் மூலம் வாகனங்களின் உரிமையாளர்களை கண்டறிவது மிகவும் சுலபமான காரியம்தான். இதன்படி கண்டறியப்பட்ட இரு சக்கர வாகனத்தின் உரிமையாளரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில், அவரிடம் இருந்து இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தை வாங்கி சென்ற தகவல் காவல் துறையினருக்கு கிடைத்தது. இந்த தகவலை அடிப்படையாக வைத்து கொள்ளையர்கள் இருவரையும் காவல் துறையினர் பிடித்து விட்டனர். அவர்களில் ஒருவரின் பெயர் ரஞ்சய். அவருக்கு வெறும் 19 வயது மட்டுமே ஆகிறது. மற்றொருவர் சிறார் ஆவார்.
தற்போது அவர்கள் இருவரும் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் துறையினரிடம் சிக்கியுள்ள இரு கொள்ளையர்களிடம் இருந்தும் கைப்பை மற்றும் 5,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொள்ளையர்களை காவல் துறையினர் விரைவாக பிடித்ததற்கு பிரபாவதியின் நினைவாற்றல்தான் முக்கிய காரணம். சிசிடிவி கேமராக்கள் இருந்தால், இது போன்ற வழக்குகளில் எளிதாக துப்பு துலங்கி விட முடியும். ஆனால் சிசிடிவி கேமராக்கள் இல்லாதபட்சத்தில், கொள்ளையர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் பதிவு எண்ணை பாதிக்கப்பட்டவர்கள் மனதில் குறித்து கொள்வது மிகவும் முக்கியம்.
காவல் துறையினரின் விசாரணைக்கு இது மிக உதவிகரமாக இருக்கும். இங்கே மற்றொரு விஷயத்தையும் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். பொதுவாக இதுபோன்ற குற்ற செயல்களுக்கு கொள்ளையர்கள் தங்களுடைய சொந்த வாகனங்களை பயன்படுத்த மாட்டார்கள். அப்படி பயன்படுத்தினால், காவல் துறையினரிடம் அவர்கள் எளிதாக சிக்கி கொள்வார்கள்.
இதன் காரணமாக எங்கேயாவது இருந்து திருடப்பட்ட வாகனங்கள் அல்லது மற்றவர்களுக்கு சொந்தமான வாகனங்களைதான் அவர்கள் பயன்படுத்துவார்கள். தங்களுக்கு தெரிந்தவர்களுடைய வாகனங்களை பயன்படுத்தினால் கூட, இந்த சம்பவத்தை போன்று காவல் துறையினரிடம் கொள்ளையர்கள் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
எனவே திருடப்பட்ட வாகனங்கள்தான் கொள்ளையர்களின் முதல் தேர்வு. இப்படிப்பட்ட நபர்களிடம் உங்கள் வாகனத்தை பறிகொடுத்து விடாமல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வாகனத்தை பறிகொடுத்ததுடன் மட்டுமல்லாது, தேவையற்ற பிரச்னைகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இச்சம்பவம் குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!