3600 கோடி செலவில் சீனாவின் சவாலான ரயில் வழித்தடம்... சீனாவின் அசுர முயற்சி..!!
3600 கோடி செலவில் சீனாவின் சவாலான ரயில் வழித்தடம்... சீனாவின் அசுர முயற்சி..!!
உலகமே திரும்பி பார்க்கும் வகையில் இதன் பணிகள் நடைபெற்று வருவதாக சீனாவின் சைனாமெயில் இணையதளம் செய்தி வெயிட்டுள்ளது.

பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உலக நாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு சீனாவின் வளர்ச்சி இருந்து வருகிறது.
இதற்காக அந்த நாடு தனது போக்குவரத்து மேம்பாட்டை சீரமைக்க செய்யும் திட்டங்களும் உலகையே வியப்பிl ஆழ்த்தியு வருகின்றன.

ஒரு பக்கம் சீனாவின் தலைநகரான பெய்ஜிங் காற்று மாசு குறைப்பாட்டால் அவுதியுருகிறது. இதற்கு வாகனப்புகை தான் பெரும்பாலான காரணமாக உள்ளது.

பெய்ஜிங்கை எடுத்துக்காட்டாக வைத்து, மற்ற நகரங்களுக்கான வளர்ச்சியில் சுற்றுச்சூழல் பாதிக்காத திட்டங்களை சீன அரசு செயல்படுத்தி வருகிறது.

அதற்காக சீனா மின்சாரம் மற்றும் ஹைஃபிரிட் வாகனங்களுக்கான தேவையை நாட்டில் அதிகரிக்கிறது. அதேபோல பொது மக்களின் தேவைக்காக ரயில் போக்குவரத்தை அதிகளவில் சீனா உருவாக்கி வருகிறது.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் திபெத் மற்றும் சிச்சுவான் பகுதிகளை இணைக்க புதிய ரயில் பாதையை அமைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

இதற்கான முதற்கட்ட பணிகளில் பலநூறு கட்டுமான பொறியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஈடுபடத்தப்பட்டு உள்ளனர்.

1700 கி.மீ தொலைவு கொண்ட சிச்சுவான், திபெத் பகுதிகளுக்கு இடையில் அதள பாதாளங்கள் நிறைய உள்ளன. இந்த வழித்தடங்கலில் தார் சாலைகள் அமைப்பதே கடினம்.

இந்நிலையில் சீனா இந்த இரு பகுதிகளுக்கு இடையில் ரயில் வழிப்பாதையை கட்டமைத்து வருவது உலக நாடுகள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 3600 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் பலநூறு சீனப் பொறியாளர்கள் சர்வதேச தரத்திலான தொழில்நுட்பங்களையும் மீறி, இந்த ரயில் வழித்தடத்தை சாத்தியமாக்கி வருகின்றனர்.

தற்போது சிச்சுவான், திபெத்திற்கு இடையே அமைக்கப்பட்டு வரும் இந்த வழித்தடம் தென்மேற்கு சீனாவின் முழு முக்கிய ரயில் வழித்தடமாக மாறியுள்ளது.

ஒரு மணி நேரத்தில் 160 கி.மீ முதல் 200 கி.மீ வரை ரயில் இயக்குவதற்கான வலிமைகளோடு சிச்சுவான், திபெத் ரயில்வே வழித்தடம் கட்டப்பட்டு வருகிறது.

2018ல் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த வழித்தடம், சீனாவால் திபெத் பகுதியில் அமைக்கப்படும் இரண்டாவது ரயில் பாதை ஆகும்.

இதற்கு பிறகு 2019ல் இதே பகுதிகளில் உள்ள காங்டிங் முதல் நீயிங்ச்சி பகுதி வரை மற்றொரு வழித்தடத்தை அமைக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.

இது தற்போது கட்டமைக்கப்பட்டு வரும் சிச்சுவான் முதல் திபெத் ரயில் வழித்தடத்தை விட மிக சவாலான பணிகளை கொண்டதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications