அதிர்ச்சி.. டம்மிகளுக்கு பதிலாக பன்றிகளை பயன்படுத்தும் விஞ்ஞானிகள்: எதற்காக தெரிஞ்சா அதிர்ச்சி உறுதி
மனித உருவம் கொண்ட டம்மிகளுக்கு பதிலாக உயிருள்ள பன்றிகளை விஞ்ஞானிகள் (ஆராய்ச்சியாளர்கள்) பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிவியல் விஞ்ஞானிகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் கருவிகளின் செயல்பாட்டை ஆராய்வதற்காக மனிதனுக்கு பதிலாக விலங்குகளை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில், சீன விஞ்ஞானிகள் டம்மிகளுக்கு பதிலாக உயிருடன் உள்ள பன்றிகளை க்ராஷ் டெஸ்டிற்காக பயன்படுத்தியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக ஆராய்ச்சிக்காக விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு, விலங்கு நல ஆர்வளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் நிலவி வருகின்றன.
ஆராய்ச்சி உட்படுத்தும் விலங்குகள் எண்ணற்ற வேதனைகளுக்கு உட்படுத்தப்படுவதானல், அவை ஊனமுறுதல் மற்றும் சில நேரங்களில் உயிரிழப்பு உள்ளிட்டவற்றிற்கு ஆளாகின்றன. அவ்வாறு, விலங்குள் துன்புறுவதுகுறித்த வீடியோக்கள் பல இணையத்தில் உலா வந்தம் இருக்கின்றது.

இந்நிலையில், க்ராஷ் டெஸ்டிற்கு சீன விஞ்ஞானிகள் பன்றிகளை பயன்படுத்திய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது விலங்கு நல ஆர்வளர்கள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, கிராஷ் டெஸ்டின்போது மனித உருவம் டம்மிக்களைப் பயன்படுத்துவதே வழக்கம். ஆனால், இங்கு உயிருள்ள விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், சீன விஞ்ஞானிகளுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் வாகனங்களை விபத்து பரிசோதனைக்கு உட்படுத்தும்போதும், அந்த வாகனத்தை மணிக்கு 30 மைல் (48.28 கிமீ) என்ற வேகத்தில் இயக்கப்படுகின்றன.
இந்த வேகத்தில் சிறிய குழந்தைகளின் டம்மிகளுக்கு பதிலாக, அதே அளவில் உள்ள ஓர் இளம் பன்றி சீட் பெல்ட் அணிவித்து அமர்த்தப்படுகின்றன. இவை, பரிசோதனையின் மனிதனைப் போல் காட்சிப்படுத்தப்பட்டு, அவற்றிற்கு என்னென்ன காயங்கள் ஏற்படுகின்றன என்பதுகுறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

இதையடுத்து, புதிய சீட் பெல்ட் அல்லது காரின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கின்ற வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. சீனர்களின் இந்த முயற்சிக்கு உலகளாவிய எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இதற்கு ஒரு சில வாகன பரிசோதனை ஆராய்ச்சியாளர்களே கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். ஆனால், சீன விஞ்ஞானிகள், மனிதர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த செயலை கையாண்டு வருகின்றோம் என தங்களின் அநியாயத்தை நியாயப்படுத்துகின்றனர்.

இந்த பரிசோதனையின்போது, விலங்குகள் பல உயிரிழப்பைச் சந்திக்கின்றன. ஆனால் அதிகபட்ச விலங்குகள் உடல் உறுப்புகளை இழந்து அவதிக்குள்ளாகின்றன.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்த விலங்கினை ஆய்வு செய்த ஓர் விஞ்ஞானி, பல விலங்குகள் அதிக ரத்த போக்கு, எலும்பு முறிவு, உடல் உள்பகுதி பாகம் சீரழிதல் போன்ற பல பின்விளைவுகளுடன் மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, பரிசோதனைக்கு முன்னர் ஆறு மணி நேரங்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் வதைக்கப்படுவதாகவும் அதிர்ச்சி மிகுந்த தகவலை கூறினார்.
சீன விஞ்ஞானிகளின் இந்த விபரீதமான செயல்குறித்து இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த விலங்குகள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள், இந்த ஆராய்ச்சியை நியாயப்படுத்த முடியாது என்று கூறினார்.

மேலும், அண்டர்ஸ்டாண்டிங் அனிமல் ரிசர்ச் குழுவின் ஆராய்ச்சியாளர் க்ரிஸ் மெர்ஜ் கூறுகையில், "இதை நம்மால் நினைத்துகூட பார்க்க முடியவில்லை. உலக நாடுகள் பல இதுபோன்ற கிராஷ் டெஸ்டிற்கு டம்மிகளையே பயன்படுத்தி வருகின்றன. ஆனால், இவர்கள் ஏன் உயிரினங்களை பயன்படுத்துகிறார்கள் என புரிந்துகொள்ள முடியவில்லை" என்றார்.

இதுபோன்று, அனைத்து பக்கத்திலிருந்தும் சீனா விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் இருக்கின்றது. தொடர்ந்து, விலங்கு பாதுகாப்பு அமைப்பான பீடாவும் தற்போது அதில் இணைந்து, எதிர்ப்பு குரலை கொடுக்க ஆரம்பித்துள்ளது.


Click it and Unblock the Notifications