சீனா-தைவான் போர் மட்டும் வந்துச்சுன்னா இந்தியாவிற்கு இவ்வளவு நஷ்டமா? இதை எதிர்பார்க்கவே மாட்டீங்க...

சீனா -தைவான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டதால் உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் துறைகள் பாதிப்பு ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

சீனா - தைவான் போர் மட்டும் வந்துச்சுன்னா இந்தியாவிற்கு இவ்வளவு நஷ்டமா ? இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கவே மாட்டீங்க . . .

கடந்த சில ஆண்டுகளாகச் சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் துறைக்கு போதாத காலம் என்றே சொல்லலாம். 2020ம் ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்டது. இதனால் உலகமே ஸ்தம்பித்தது. இதனால் மக்கள் வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டது. மக்கள் ஒரு இடம் விட்டு வேறு இடத்திற்கு நகர முடியாது என்ற காரணத்தால் ஆட்டோமொபைல் பயன்பாடும் குறைந்துவிட்டது, விற்பனையும் குறைந்துவிட்டது. இதனால் ஆட்டோமொபைல் துறையில் பெரிய அளவில் தள்ளாட்டம் கண்டது.

சீனா - தைவான் போர் மட்டும் வந்துச்சுன்னா இந்தியாவிற்கு இவ்வளவு நஷ்டமா ? இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கவே மாட்டீங்க . . .

அதன்பின் 2020 கொரோனா முதல் அலை, 2021 கொரோனா இரண்டாம் அலை என மிகப்பெரிய அளவில் ஆட்டம் காண்ட பின்பு மெல்ல மெல்ல ஆட்டோமொபைல் துறை மீண்டு வரத்துவங்கியது. இந்தியா முழுவதும் வாகன விற்பனை அதிகரிக்கத் துவங்கியது. மக்கள் மத்தியில் பணப்புழக்கம் மெல்ல மெல்ல அதிகரித்தது. இந்நிலையில் மீண்டும் சர்வதேச ஆட்டோமொபைல் துறைக்கு மிகப்பெரிய இடி காத்திருந்தது.

சீனா - தைவான் போர் மட்டும் வந்துச்சுன்னா இந்தியாவிற்கு இவ்வளவு நஷ்டமா ? இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கவே மாட்டீங்க . . .

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. இதனால் உக்ரைன் நாடே உருக்குலைந்து போனது. அப்பொழுது யாரும் எதிர்பார்க்கவில்லை ஆட்டோமொபைல் மற்றும் தொழிற்நுட்ப துறைக்கு இது பெரும் பின்னடைவைத் தரும் என்று, உக்ரைன் போர் துவங்கிய சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் செமி கண்டெக்டர்சிப்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது ஏன் ஏற்படுகிறது எங்குப் பிரச்சனை எனப் பார்த்தால் இதற்குப் பின்னால் உக்ரைன் போர் இருப்பது தெரியவந்தது.

சீனா - தைவான் போர் மட்டும் வந்துச்சுன்னா இந்தியாவிற்கு இவ்வளவு நஷ்டமா ? இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கவே மாட்டீங்க . . .

அதாவது செமி கண்டெக்டர் சிப்களை தயாரிக்க நியான் வாயு முக்கியம். இந்த நியான் வாயு இரும்பு தயாரிப்பில் உபரி தயாரிப்பாகக் கிடைக்கும் ஒரு பொருள். உலகில் இரும்பு தயாரிப்பில் உக்ரைன் தான் முதலிடத்திலிருந்தது. இதனால் பெரும்பகுதி நியான் வாயு கிடைக்கவில்லை. இதனால் செமி கண்டெக்டர் சிப் பாதிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் உள்ள தொழிற்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்தது.

சீனா - தைவான் போர் மட்டும் வந்துச்சுன்னா இந்தியாவிற்கு இவ்வளவு நஷ்டமா ? இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கவே மாட்டீங்க . . .

இந்தியாவில் பல நிறுவனங்கள் தன் உற்பத்தியைக் குறைத்துக்கொண்டன. புக்கிங்கள் பல குவிந்தும் டெலிவரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. உட்சபட்சமாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் எல்லாம் குறிப்பிட்ட மாதம் ஒரு வாகனத்தைக் கூட தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் இதற்கெல்லாம் மாற்று ஏற்பாடுகளைச் செய்து இப்பொழுது தான் ஆட்டோமொபைல் நிறுவனம் மெல்ல மெல்ல சிப் தட்டுப்பாட்டிலிருந்து மீண்டு வருகிறது.

சீனா - தைவான் போர் மட்டும் வந்துச்சுன்னா இந்தியாவிற்கு இவ்வளவு நஷ்டமா ? இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கவே மாட்டீங்க . . .

இந்நிலையில் மீண்டும் ஆட்டோமொபைல் துறையில் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டும் படியான ஒரு செய்தி ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதாவது சீனாவிற்கும் தைவானிற்கும் இடையே போர் முளூம் சூழல் உருவாகியுள்ளது. இது மட்டும் நடந்துவிட்டால் மீண்டும் ஆட்டோமொபைல் மற்றும் தொழிற்நுட்ப துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு விடும். மீண்டும் வாகன தயாரிப்பில் மந்தம் ஏற்படும்.

சீனா - தைவான் போர் மட்டும் வந்துச்சுன்னா இந்தியாவிற்கு இவ்வளவு நஷ்டமா ? இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கவே மாட்டீங்க . . .

உலகின் மிக அதிக அளவிலான செமி கண்டெக்டர் சிப் தயாரிப்பு நிறுவனம் தைவானில் தான் இருக்கிறது. இதனால் தைவானைச் சீனா தொடர்ந்து தாக்கினால் உலக அளவில் மீண்டும் சிப் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ஆட்டோமொபைல் நிறுவனம் மீண்டும் கொரோனாவிற்கு முந்தைய நிலைக்கு வந்துள்ளது. மீண்டும் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டால் அது ஆட்டோமொபைல் துறைக்குப் பேரிடியாகத் தான் இருக்கும்.

சீனா - தைவான் போர் மட்டும் வந்துச்சுன்னா இந்தியாவிற்கு இவ்வளவு நஷ்டமா ? இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கவே மாட்டீங்க . . .

சீனா போர் சூழல் குறித்து தைவான் செமி கண்டெக்டர் கம்யூனிட்டி ஏற்கனவே போர் வந்தால் தங்களால் செயல்பட முடியாது என எச்சரித்துள்ளது. இதனால் இப்பொழுதே ஆட்டோமொபைல் துறையினர் பெரும் கலக்கத்தில் இருக்கின்றனர். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர். இந்தியாவில் Fedetation of Automobile Dealers Association ஒரு எச்சரிக்கையை அறிவித்துள்ளது. அதன்படி தைவான் தாக்குதலுக்கு உட்பட்டால் இந்தியா உட்படப் பல நாடுகளில் ஆட்டோமொபைல்துறைகளில் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது. இது குறித்த முழு தகவல்களைக் காணலாம்.

Article Published On: Friday, August 5, 2022, 11:41 [IST]
English summary
China Taiwan war may impact semiconductor productivity know full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+