Just In
- 27 min ago இந்தியாவில் சுஸுகி 2-வீலர்கள் உற்பத்தி 80 இலட்சத்தை கடந்தது!! தொழிற்சாலை எங்கு உள்ளது தெரியுமா?
- 2 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 3 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 3 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- Sports பக்கத்தில் வந்து தோற்றுவிட்டோம்! இதயம் முற்றிலும் நொறுங்கிவிட்டது..பஞ்சாப் கேப்டன் சாம் கரண் கருத்து
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வீட்டில் இருந்தப்படியே காரை டெலிவிரி செய்யலாம்... சீனாவில் புதிய டெலிவிரி முறையை அறிமுகப்படுத்திய க
நெஸேட்டி நிறுவனத்தை முன்னோடி நிறுவனமாக கொண்டுள்ள சீன ஆட்டோமொபைல் நிறுவனமான கீலே ஆட்டோ, வாடிக்கையாளருடன் எந்தவொரு நேரடி தொடர்பும் இல்லாமல் கார்களை டெலிவிரி செய்யும் முறையை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.
கீலே நிறுவனம் இந்த புதிய டெலிவிரி முறைக்காக ட்ரோனை பயன்படுத்தவுள்ளது. ஏனெனில் ட்ரோன் மூலமாக தான் டெலிவிரி காருக்கான சாவி வழங்கப்படவுள்ளது. கீலே நிறுவனத்தின் இந்த புதிய முயற்சிக்கு முக்கிய காரணம் அனைவரும் அறிந்தது தான், கொரோனா வைரஸ்.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் புதியதாக கண்டெடுக்கப்பட்ட இந்த வைரஸ் உலகின் வளர்ந்த நாடுகள் உள்பட அனைத்து நாடுகளையும் ஆட்டி படைத்து வருகிறது. வேகமாக பரவி வரும் இந்த வைரஸிற்கு ஆட்டோமொபைல் நிறுவனமும் அடிபணியாமல் இல்லை.
கடந்த பிப்ரவரி மாத 10ல் கீலே ஆட்டோ நிறுவனம் வாடிக்கையாளர்கள் தயாரிப்பு கார்களை இணையத்திலேயே பார்த்து தேர்வு செய்யும் வகையில் ஒன்-ஸ்டாப் தீர்வை வழங்கியிருந்தது. இந்த தீர்வின் மூலமாக வாடிக்கையாளர்கள் தனது காரில் கொண்டுவர விரும்பும் மாடிஃபிகேஷன் மாற்றங்களையும், ஆன்லைன் ஃபைனான்ஸிங் மற்றும் இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்டவற்றையும் செய்து முடிக்க முடியும்.
ஹோம் டெலிவிரி முறையும் அப்போதே கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் கூடுதல் தேர்வாக அது இருந்தது. தற்போது அது கொரோனா வைரஸால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹோம் டெலிவிரி சிஸ்டத்தையும் கீலே நிறுவனம் ட்ரோன் மூலமாக மேம்படுத்தியுள்ளது.
இதனால் சீனாவில் இனி கீலே தயாரிப்புகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களது லொக்கேஷனை பகிர்ந்து கொண்டாலே போதும், ஆர்டர் செய்யும் கார் வீட்டின் வாசலிலேயே வந்து நிற்கும்.
பிப்ரவரியில் கொண்டுவரப்பட்ட கீலேவின் இந்த புதிய ஆன்லைன் முறையின் மூலமாக இதுவரை 10,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் கார்களை ஆர்டர் செய்தும், அதற்கான பணத்தை செலுத்தியும் உள்ளனர். 1,10,000 பயனாளர்கள் கீலே தயாரிப்புகளின் மீதுள்ள தங்களது ஆர்வத்தை பதிவு செய்துள்ளனர்.
உறுதி செய்யப்பட்ட ஆர்டர்கள், ஹோம் டெலிவிரியை ஏற்கும் லோக்கல் டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான ஷாப்பிங் அனுபவத்தை பெறுவதற்காக ஹோம் டெலிவிரி செய்யப்படும் வாகனங்களில் கிருமி நாசினி டீலர்கள் மூலமாக தெளிக்கப்படவுள்ளன. இதற்காக கீலே ஆட்டோ நிறுவனம் 370 மில்லியன் ஆர்எம்பி நிதியை ஒதுக்கியுள்ளது.
இதனால் இந்நிறுவனத்தின் இனி வரும் மாடல்களை தூய்மையானதாக எதிர்பார்க்கலாம். இத்தகைய தயாரிப்பு கார்களில் கேபின் ஏர் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் மெட்டிரீயல்கள் உபயோகப்படுத்தப்படவுள்ளன. இவ்வாறான நுண்ணுயிர் கொல்லி ஃபில்டர்களை பெற்ற கீலேவின் முதல் ஐகான் மாடல் கடந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.