Just In
- 25 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Movies மண்டைமேல இருக்க கொண்டையை மறைங்க பாஸ்.. வாரிசு நடிகையால் வந்த வினை.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குநர்?
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அடங்கேப்பா பல கோடி ரூபாய் முதலீடு செய்யும் சீன நிறுவனம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் எடப்பாடி!
சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆட்டோமொபைல் மற்றும் மின்சார பொருள் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பக்கம் முதலீடுகளை கவர்கின்ற வகையிலான முயற்சியில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. இதற்காக, முதலமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அண்மையில் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றிருந்தனர்.
தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் உலக முதலீடு மற்றும் தேர்ச்சி மேம்பாட்டு மாநாடு ஒன்று கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
தமிழக அரசின் இந்த முயற்சிகளின்மூலம் இதுவரை 5,027 கோடி ரூபாய்க்கான முதலீடு ஈர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதன்மூலம் மாநிலத்தில் 20,351 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான பிஒய்டி 2,800 ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
பிஒய்டி நிறுவனம் ஆட்டோமொபைல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் மிகமுக்கிய நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய இருப்பதால் சுமார் 11,500 பேருக்கு வேலை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இது, தமிழகத்தில் எலெக்ட்ரிக் பஸ், டிரக் மற்றும் வேறு சில வாகனங்களையும் தமிழகத்தில் தயாரிக்க இருக்கின்றது. இது மட்டுமின்றி, செல்போன்களுக்கு தேவையான பொருட்கள், சோலார் பேனல்கள், பேட்டரிகள் மற்றும் அதனை சார்ஜ் செய்ய தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அது தயாரிக்க இருக்கின்றது.
தொடர்ந்து, மின் வாகனங்களுக்கு தேவையான சார்ஜிங் பொருட்கள் மற்றும் ரெயில் டிரான்ஸிட் உள்ளிட்ட பொருட்களையும் அந்நிறுவனம் தயாரிக்க உள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 9 நிறுவனங்களுடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முடிவினை பிஒய்டி நிறுவனம் எடுத்துள்ளது. இத்துடன், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஏத்தர் எனர்ஜி, ஐடிசி பேப்பர்போர்டு, மிட்சுபா சிக்கால், ஸ்ரீவாரி எனர்ஜி சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன.
இதில், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் மூலம் ஒசூரில் அமையவுள்ள மின் வாகனங்கள் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையால் 4,321 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக உள்ளது. இதற்காக, அந்நிறுவனம் ரூ. 635.4 கோடி முதலீடு செய்ய இருக்கின்றது.
தொடர்ந்து, மிட்சுபா சிக்கல் இந்தியா பிரைவேட் லிமிடெட் அதன் நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான கூறுகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை விரிவுபடுத்த சுமார் 503.6 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம் 330 வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றது.
மேலும், ஐ.டி.சி பேப்பர் போர்டு மற்றும் ஸ்பெஷாலிட்டி பேப்பர்ஸ் குழுமம் ரூ. 515 கோடி முதலீட்டில் ஒரு காகித உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இத்துடன், பாதுகாப்பு பயன்பாடுகளுக்கான ரேடார் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை தயாரிக்க டேட்டா பேட்டர்ன் ரூ. 50 கோடி முதலீடு செய்ய இருக்கின்றது.
மேலும், குரோத் லிங்க் ஓவர்சீஸ் நிறுவனம் காலணிகளை உற்பத்தி செய்வதற்காக ரூ. 175 கோடி முதலீடு செய்ய உள்ளது.
ஸ்ரீவாரி எனர்ஜி சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் வெப்ப மற்றும் காற்றாலை எரிசக்தி உற்பத்திக்கான கட்டமைப்பு கூறுகளை தயாரிக்க ரூ. 250 கோடி முதலீடு செய்ய இருக்கின்றது. எஸ்.என்.எஃப் காம்பனென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் புல் மெஷின்ஸ் பிரைவேட் லிமிடெட் கட்டுமான உபகரண ஆலையில் ரூ. 98 கோடி முதலீடு செய்ய உள்ளது.
இதேபோன்று அரசும் அதன் சார்பில் ரூ. 60 கோடி செலவில் மூன்று திறன் மேம்பாட்டு மையங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது. இந்த முயற்சியில் ஓர் பங்காளியாக டிவிஎஸ் நிறுவனம் ஆட்டோ, ஆட்டோ கூறுகள் மற்றும் இயந்திர கருவிகளுக்கான அபெக்ஸ் திறன் மேம்பாட்டு மையத்தை நிறுவ உள்ளது.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?