Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
புதிய பென்ட்லீ காரை க்றிஸ்லர் என பேட்ஜ் மாற்றி உரிமையாளர்... என்ன காரணமாம்?
வங்கதேசத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் டபிள்யூ12எஸ் சொகுசு காரில் க்றிஸ்லர் 300சி காரின் பேட்ஜை ஒட்டப்பட்டு சாலைகளில் திரிந்ததை படமெடுத்து வெளியிட்டுள்ளனர்.
சாதாரண கார்களை விலை உயர்ந்த கார் மாடல் போல பேட்ஜ் ஒட்டி அலங்காரம் செய்து கொள்வது பலருக்கு வழக்கமான விஷயம். ஆனால், விலை உயர்ந்த காரை, அதனைவிட விலை குறைந்த காரின் பேட்ஜ் ஒட்டி யாரும் அழகு பார்ப்பார்களா என்ன?
அப்படி அவர்கள் குறைவான விலை காரின் பேட்ஜ் ஒட்டியிருந்தால் அதில் நிச்சயம் ஏதோ விஷயம் இருக்கிறதே என்று அர்த்தம். அதுபோன்ற செய்தி ஃபேஸ்புக் வழியே வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.
வங்கதேசத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் டபிள்யூ12எஸ் சொகுசு காரில் க்றிஸ்லர் 300சி காரின் பேட்ஜை ஒட்டப்பட்டு சாலைகளில் திரிந்ததை, அந்நாட்டை சேர்ந்த கார் பிரியர்களின் ஃபேஸ்புக் பக்கம் ஒன்று படம் பிடித்துள்ளது.
அதற்கான காரணமும் நம்மை ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது. ஆம், இந்த பென்ட்லீ காரின் உரிமையாளர் இறக்குமதி வரியை தவிர்ப்பதற்காக இவ்வாறு செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, வங்கதேசத்தில் கார்களுக்கு 400 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக வேறு பிராண்டு பெயரை பயன்படுத்தி அந்த காரை இறக்குமதி செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ரோல்ஸ்ராய்ஸ் கார்களுக்கு இணையான பிராண்டாக கருதப்படும் பென்ட்லீ தயாரிப்புகள் உலக அளவில் பல வாடிக்கையாளர்களின் கனவு மாடல். ஆனால், பெரும்பாலான நாடுகளில் இறக்குமதி வரி காரின் விலையைவிட பன்மடங்கு அதிகமாக இருப்பதால் இதுபோன்று பல மோசடிகள் செய்து அந்த கார்களை இறக்குமதி செய்கின்றனர்.
படத்தில் இருக்கும் இந்த பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் டபிள்யூ12 எஸ் காரில் 6.0 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 626 பிஎச்பி பவரையும், 820 என்எம் டார்க்கையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்த சக்திவாய்ந்த பென்ட்லீ சொகுசு கார் பல கோடி விலை மதிப்பு கொண்டது. ஆனால், இறக்குமதி செய்யும்போது அதன் விலை பன்மடங்கு அதிகமாக இருப்பதால் இதுபோன்று செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.