Just In
- 43 min ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 57 min ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- 1 hr ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 2 hrs ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Don't Miss!
- News நம்பர் 1 திமுக.. 3வது இவங்களா? யார் யாருடன் கள்ள உறவு? பாஜகனு சொன்னதுமே.. வந்துட்டாரு டிடிவி தினகரன்
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Movies என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு அரைவேக்காடா?.. பிரபலம் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?
11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்துள்ள சூப்பர் கண்ணாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகிலேயே சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் நாடுகளில் ஒன்று இந்தியா. இங்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்து வருகின்றனர். சாலை விபத்துக்கள் நடைபெற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் டிரைவர்கள் தூக்க கலக்கத்தில் வாகனங்களை ஓட்டுவதே சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.
லக்னோ மத்திய வழித்தட ஆராய்ச்சி மைய அறிக்கையின்படி, 20 சதவீத சாலை விபத்துக்களுக்கு சோர்வு (அ) தூக்க கலக்கத்தில் வாகனங்களை ஓட்டுவதே காரணமாக உள்ளது. எனவே தூக்க கலக்கத்தில் வாகனம் இயக்க வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், டிரைவர்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இருந்தபோதும் தூக்க கலக்கம் காரணமாக நடைபெறும் விபத்துக்கள் நடைபெற்று கொண்டேதான் உள்ளன. இந்த சூழலில் இப்பிரச்னைக்கு பள்ளி மாணவர் ஒருவர் அறிவியல் உதவியுடன் தீர்வு கண்டுபிடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்தவர் பிரதியூஷ் சுதாகர். 16 வயதாகும் இவர், கோட்டா சர்வோதயா பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
சாலை விபத்துக்களை தடுக்கும் வகையிலான புதிய கண்ணாடியை பிரதியூஷ் சுதாகர் கண்டுபிடித்துள்ளார். வாகனம் ஓட்டும்போது இந்த கண்ணாடி டிரைவர்களை தூங்க அனுமதிக்காது. ஆம், உண்மைதான். வாகனம் ஓட்டும்போது நீங்கள் இந்த கண்ணாடியை அணிந்து கொண்டால், நீங்கள் கண்டிப்பாக தூங்க மாட்டீர்கள். அது எப்படி? என்பதை இனி பார்க்கலாம்.
பிரதியூஷ் சுதாகர் கண்டுபிடித்துள்ள அதிநவீன கண்ணாடியின் இடது பக்கத்தில் இன்ஃப்ராரெட் சென்சார் (Infrared Sensor) வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 எல்இடி பல்புகளும் கனெக்ட் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலமாக உருவாக்கப்படும் இன்ஃப்ராரெட் கதிர்வீச்சு, டிரைவரின் கண் இமைகளின் மீது பட்டு பிரதிபலிக்கும்.
அப்போது இக்கதிர்வீச்சை போட்டோடையோடு (Photodiode) 'ரிசீவ்' செய்து சிக்னல் ஒன்றை உருவாக்கும். இதன் விளைவாக உண்டாகும் அதிர்வு, டிரைவரை தூங்க விடாமல் கண் விழிக்க வைத்திருக்கும். எனவே சாலை விபத்துக்களும் தடுக்கப்படும். மாணவன் பிரதியூஷ் சுதாகர் கண்டுபிடித்துள்ள இந்த கண்ணாடி தற்போது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
சாலை விபத்து தொடர்பான செய்திகளை படித்த பிறகுதான், இப்படி ஒரு கண்ணாடியை உருவாக்கும் ஐடியா கிடைத்ததாக பிரதியூஷ் சுதாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இந்த கண்ணாடியை உருவாக்கும் பணிகளை கடந்த 6 மாதத்தில் முடித்தேன்'' என்றார். பிரதியூஷ் சுதாகருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பிரதியூஷ் சுதாகரின் தந்தை பெயர் ஆஷிஸ் சுதாகர். இவர் தனியார் வங்கி ஒன்றில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். பிரதியூஷ் சுதாகரின் தாய் பெயர் மம்தா சக்சேனா. இவர் அரசு பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி கொண்டுள்ளார்.
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!