Just In
- 3 min ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 38 min ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 1 hr ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 2 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Movies பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தண்ணீரில் ஓடும் பைக்: அரசின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் திருச்சி இளைஞர்!
திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் பைக்கைக் கண்டுபிடித்துச் சாதனைப் படைத்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் வாகனங்களால் பல்வேறு பிரச்னைகள் பூதகரமாக கிளம்பி வருகின்றன. மேலும், இந்த வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைவதுடன், வெப்பமயமாதல் என்னும் கொடிய பின்விளைவை ஏற்பட்டு வருகிறது.
இதனைத் தவிர்க்கும் விதமாக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், நாட்டில் இயங்கக்கூடிய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல, இந்தியாவிலும் கணிசமான முயற்சிகள் எரிபொருள் வாகனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக, மின்வாகனங்களுக்கு மானியம் வழங்குதல், சார்ஜிங் நிலையங்களை அதிகரித்தல், சுலப தவனை, வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மீது பசுமை வரி எனப்படும் புது வரியை திணிக்கவும் மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது.
இந்த நிலையில், அதிகரித்து வரும் மக்கள் தொகை, அதனுடன் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்கள், கூடவே முயல் வேகத்தில் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை ஆகியவை தீர்க்க முடியாத சிக்கலை அரசு அதிகாரிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது.
இதனால், பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருளுக்கு மாற்றாக, அதேசமயம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத எரிபொருளை கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், கருமண்டபம் பகுதியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்த லக்ஷ்மணன், என்பவர் தண்ணீரில் ஓடும் பைக்கைக் கண்டுபிடித்துச் சாதனைப்படைத்துள்ளார்.
தண்ணீர் என்பது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய மூலக்கூறுகளால் இணைந்தது. ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்த முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஆகையால் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை மட்டும் பிரித்து எடுத்து அதில் வாகனத்தை இயக்க வைக்கும் முயற்சியில் லக்ஷ்மணன் ஈடுபட்டார்.
எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான இவர் சிறு வயதிலிருந்தே புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இதன்காரணமாக, பைக் மெக்கானிஸம் மற்றும் ஆட்டோ மொபைல் துறையில் டிப்ளமோ கோர்ஷை முடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அவரது நீண்ட நாள் கனவு திட்டமான தண்ணீரில் ஓடும் பைக்கைக் கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
தண்ணீரில் ஓடும் பைக் மூலம் அந்த பகுதியை வளம் வரும் லக்ஷ்மணன் இதுகுறித்து கூறியதாவது, "ஒரு லிட்டர் தண்ணீரில் கெமிக்கல் ஊற்றப்பட்டு, ஹைட்ரஜன் தனியாக ஆக்ஸிஜன் தனியாகப் பிரித்து எடுக்கப்படுகிறது. பின்னர், பிரித்தெடுக்கப்பட்ட ஹைட்ரஜன் மூலம் கரண்ட் உருவாக்கப்படுகிறது. இதற்காகவே பிரத்யேமாக உருவாக்கப்ட்ட எஞ்ஜினை இந்த மின்சாரத்தைக் கொண்டு இயக்கப்படுகின்றது.
இந்த திட்டத்துக்காக கடந்த பதிமூன்று ஆண்டுகளாக நான் பணியாற்றி வருகிறேன். 1996ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் நீண்ட ஆய்வுக்குப் பின் தற்போது தான் வெற்றியடைந்துள்ளது.
இந்த தண்ணீரில் இயங்கும் சைக்கிள் குறித்து ஆராய்ச்சி செய்யவே, ஆட்டோ மொபைல்ஸ், மெக்கானிஸம் ஆகிய டிப்ளமோ படிப்புகளைக் கற்று இந்த சைக்கிளை கண்டுபிடித்துள்ளேன்" என்றார்.
இதைத்தொடர்ந்து, தனது கண்டுபிடிப்பை அலட்சியம் செய்யாமல், மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இதுபோல ஆராய்ச்சியில் ஈடுபடும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகளை கண்டறிந்து, அரசு ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளார்.
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..