Just In
- 3 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 4 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 6 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 6 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அப்பாடா... இனிமேல் அதுக்காக போலீஸ் ஃபைன் போட மாட்டாங்க... நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்...
காவல் துறையினர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் மூலம் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கார்களில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமா? என்ற குழப்பம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களில், பொது இடங்கள், வேலை செய்யும் இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் பயணங்களை மேற்கொள்ளும்போது முக கவசம் அணிவது கட்டாயம் என கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் காரில் பயணம் செய்பவர்கள் பொது இடத்தில் இருப்பதாக கருதப்பட்டு, தனியாக பயணம் செய்து கொண்டிருந்தாலும் கூட, முக கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் காரில் தனியாக பயணிப்பவர்களுக்கு எதற்கு முக கவசம்? என எதிர்ப்பு கிளம்பியது.
எனவே குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர், மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில், ''சுகாதார துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களில், காரில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்படவில்லை'' என கூறப்பட்டிருந்தது.
அதாவது காரில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த விளக்கத்திற்கு பின்னரும், புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், காரில் தனியாக பயணம் செய்யும்போது முக கவசம் அணியாதவர்களுக்கு, காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.
இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்தனர். இது தொடர்பாக புனேவை சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர் கூறும்போது, ''காரில் தனியாக பயணம் செய்யும் அனைத்து நேரங்களிலும் முக கவசம் அணிந்திருப்பது கட்டாயமா? அனைத்து நேரமும் ஜன்னல் கண்ணாடிகள் மேலே ஏற்றப்பட்டுள்ளது. அத்துடன் வழியில் எங்குமே நிறுத்தப்போவதும் இல்லை. அதற்கு எதற்கு முக கவசம்?
நான் காரில் தனியாக பயணித்து கொண்டிருந்தபோது, காவல் துறையினர் என்னை நிறுத்தினர். அப்போது முக கவசத்தை நான் எனது கழுத்து பகுதியில் இறக்கி விட்டிருந்தேன். ஆனால் நான் அளித்த விளக்கத்தை காவல் துறையினர் கேட்க மறுத்து விட்டனர். மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் அறிவிப்பு தொடர்பாகவும் நான் கூறினேன். ஆனால் காவல் துறையினர் எதையும் காதில் வாங்கவில்லை.
இதனால் நான் அபராதம் செலுத்த நேரிட்டது. சாலையோரமாக நின்று கொண்டு முக கவசம் அணியாமல், உணவு சாப்பிடுபவர்கள் மீதும், குளிர்பானங்களை அருந்துபவர்கள் மீதும் காவல் துறையினர் இப்படி நடவடிக்கை எடுப்பார்களா?'' என்றார். தற்போது இந்த பிரச்னைக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
இதன்படி காரில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணியாமல் இருந்தாலும் இனிமேல் அபராதம் விதிக்கப்போவதில்லை என டெல்லி போக்குவரத்து காவல் துறையினர் அறிவித்துள்ளனர். அதாவது காரில் தனியாக பயணம் செய்யும்போதும் முக கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.
அதேபோன்று புனே மாநகர காவல் துறையினரும், காரில் தனியாக பயணம் செய்யும்போது முக கவசம் அணியாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை நிறுத்தியிருப்பதாக தற்போது அறிவித்துள்ளனர். குழப்பங்களுக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதால், காரில் பயணம் செய்பவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து புனே மாநகர காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''காரில் தனியாக பயணம் செய்யும்போது முக கவசம் அணிவது கட்டாயமில்லை என மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியிருப்பது உண்மைதான். எனவே காரில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணியாமல் இருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் காரில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தால், முக கவசம் அணிந்திருப்பது அவசியம். அதாவது 2, 3 பேர் காரில் குழுவாக பயணம் செய்யும்போது முக கவசம் அணியாமல் இருந்தால் காவல் துறையினர் எப்போதும் போல் அபராதம் விதித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றனர்.
Note: Images used are for representational purpose only.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!