உக்கர தாண்டவமாடும் கொரோனா: ஏழைகளின் போக்குவரத்து நண்பன் ஷேர் ஆட்டோக்களுக்கு தடை...
ஏழை மக்களுடைய போக்குவரத்து நண்பனாக விளங்கும் ஷேர் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா (நாவல் கோவிட்-19) எனப்படும் கொடிய உயிர் கொல்லி வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் மிகப்பெரிய அச்சுறுத்தலைச் சந்தித்து வருகின்றன.
இந்த வைரஸ் தொற்று, பாதிக்கப்பட்டவர்கள் தும்புவது மற்றும் இரும்புவது உள்ளிட்ட செயல்களின் மூலம் மற்றவர்களுக்கு பரவும் தன்மைக் கொண்டதாக இருக்கின்றது.

ஆகையால், இது மிக எளிதாகவும், வேகமாக மற்றவர்களை தொற்றி, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி வருகின்றது.
இந்த வைரஸ் தொற்றானது ஆரம்பத்தில் சீனாவின் வுஹான் நகரத்தில் மட்டுமே காணப்பட்டாது. ஆனால், இதன் எளிமையான தொற்றின் காரணமாக தற்போது உலக நாடுகள் பலவற்றில் பரவி காணப்படுகின்றது.

இதுவரை இந்த வைரஸ் தொற்று 170க்கும் அதிகமான நாடுகளில் பரவி காணப்படுகின்றது. அதிலும், மிக முக்கியமாக சீனா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் அதன் ருத்ர தாண்டவத்தைக் காட்டி வருகின்றது.
இந்த கோர ஆட்டத்தில் இதுவரை பல்லாயிரக் கணக்கானோர் உயரிழந்துள்ளனர். அதாவது, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதில், நேற்று (மார்ச் 21) ஒரே நாளில் இத்தாலி நாட்டில் மட்டும் 627 பேர் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆகையால், அந்த நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 4,825 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி இது மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இத்தாலி நாட்டின் இந்த பரிதாப நிலையைக் கண்டு உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் உரைந்திருக்கின்றன. அதேசமயம், இத்தாலி மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகின்றது. அந்தவகையில், சீனாவில் 3,255 பேரும், ஈரானில் 1,556 பேரும், ஸ்பெயினில் 1,378 பேரும், பிரான்ஸ் நாட்டில் 562 பேரும், அமெரிக்காவில் 324 பேரும் இதுவரை கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். இது நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழ்நிலையேக் காணப்படுகின்றது.

ஆகையால், இந்த கொரோனாவால் தங்களின் நாடும் கூடுதல் பாதிப்பைச் சந்தித்து விடக்கூடாது என்பதில் ஒவ்வொரு நாடும் அதி தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், மக்கள் தரப்பில் இருந்து போதுமான ஒத்துழைப்பில்லாத காரணத்தல் நாளுக்கு நாள் புதிய நபர்கள் வைரஸ் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.
இருப்பினும், அரசு தரப்பிலிருந்து விடாப்பிடியாக முயற்சிகள் மக்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், இந்தியாவில் இன்று (மார்ச் 22) மக்கள் ஊரடங்கு என்ற உத்தரவை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். இது பெரியளவில் வெற்றிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இதன்மூலம் நாட்டு மக்களைக் காக்க முடியும் என அரசு நம்புகின்றது. கொரோனா தொற்றுள்ள ஒவ்வொரு நாடும் அடுத்தடுத்த வாரங்களில் தொற்று விகிதத்தின் உயர்வையே விடையாக பெற்று வந்தது. இந்த அவலத்தைத் தவிர்க்கும் விதமாகவே மத்திய அரசு இந்த மக்கள் ஊரடங்கு உத்தரவைக் கொண்டு வந்திருக்கின்றது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அடுத்து மெட்ரோ ரயில் சேவை, பொது போக்குவரத்து, சந்தை மற்றும் பயணிகள் ரயில் என அனைத்தும் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. மக்கள் வெளியில் நாடமாடக் கூடாது என்பதற்காகவே இந்த அதிரடி நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகின்றது. இதற்கு அனைத்து மாநில அரசுகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.

மேலும், தங்களின் சார்பாகவும் குறிப்பிட்ட நடவடிக்கைகளை அவை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், மாநில அரசுகள் சார்பில் கொரோனா தடுப்பு பணிகள் மிக தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக, பொதுபோக்குவரத்து வாகனங்கள் அனைத்திற்கும் இன்று ஒரு நாள் முழு ரத்து விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மக்கள் வெளியில் நடமாடக்கூட எனவும் தடை உத்தரவை பலப்படுத்தியுள்ளது.

இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்பட்ட நாட்டின் அனைத்து நகரங்களும் தற்போது ஓய்ந்த (முடங்கி) நிலையில் காணப்படுகின்றது. குறிப்பாக, மிகவும் அமைதியான சூழ்நிலையே நாட்டின் அனைத்து பகுதியிலும் காணப்படுகின்றது. மேலும், வாகனங்களின் இயக்கம் குறைந்திருப்பதால், அதில் இருந்து நச்சு கலந்த புகை வெளிவருவதும் குறைந்திருப்பது. இதனால், காற்று மாசு மிக அதிகளவில் குறைந்து காணப்படுகின்றது.

இது ஒரு பக்கம் வரவேற்கும் வகையில் இருந்தாலும் மக்கள் கொரோனாவால் கொத்து கொத்தாக உயிரிழந்து வருவது மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஆகையால், கொரோனா தொற்றைத் தடுப்பது மிக முக்கியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே நகரத்தின் அதிகாரிகள் தங்களின் பங்காக கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான முயற்சியில் களமிறங்கியிருக்கின்றனர்.

இதனடிப்படையில், குறிப்பிட்ட நாட்களுக்கு ஷேர் ஆட்டோக்களுக்கு தானே நகராட்சி தடை விதித்துள்ளது. அதேசமயம், ஷேர் ஆட்டோக்கள் மட்டுமின்றி ஊபர் பகிர்வு பயணம் மற்றும் ஓலா பகிர்வு பயணம் ஆகியவற்றிற்கும் தடை நகராட்சி தடை விதித்திருக்கின்றது.

இந்த அதிரடி தடையானது வருகின்ற மார்ச் 31ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம் ஏழை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், கோரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க வேண்டுமானால் நாம் சில இழப்புகளை கொடுத்துதான் வேண்டியிருக்கின்றது. கொரோனாவால் ஏற்படும் இழப்பைக் காட்டிலும் இந்த இழப்பு பெரியதாக இல்லை. மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் இதுவரை 52 பேர் (நேற்றைய நிலவரப்படி) பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. இது மேலும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஏழைகளின் போக்குவரத்து நண்பனான ஷேர் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற அதிரடி நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் நம்மால் காண முடிகின்றது.
ஆகையால் கொரோனா தொற்றில் இருந்து நம்மையும், நம்மை சுற்றியிருப்பவர்களையும் காக்க வேண்டியது கட்டாயமாகியிருக்கின்றது.
குறிப்பு: புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை..


Click it and Unblock the Notifications








