Just In
- 30 min ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 6 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 7 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 7 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எல்லாரும் ஆசைப்பட்ட அறிவிப்பு வெளியானது... மத்திய அரசு அதிரடி...
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 ஒட்டுமொத்த உலகையும் தற்போது அச்சுறுத்தி வருகிறது. மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட்-19 வைரஸால், தற்போது வரை உலகம் முழுவதும் 21,297 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட்-19 வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வரை அதிகாரப்பூர்வமாக மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதும் 4,71,820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை தற்போது வரை 649 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா, இத்தாலி, ஸ்பெயின், மற்றும் அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் பாதிப்பு குறைவு என்றாலும், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தனிமையில் இருக்கும்படி வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். பால், காய்கறி மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் பொது சாலைகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், அதிரடியான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தேசிய நெடுஞ்சாலைகளில், டோல் கட்டணம் வசூலிப்பதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இதனை அறிவித்துள்ளார்.
அவசர கால சேவைகளை எளிதாக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து டோல்பிளாசாக்களிலும் டோல் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இதனால் சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லாமல் வாகனங்கள் இலவசமாக சென்று வரலாம். ஆனால் இந்த சலுகை தற்காலிகமானதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. டோல்கேட்களில் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்பது இந்தியாவில் மிக நீண்ட நாட்களாக இருக்கும் கோரிக்கை. அந்த கோரிக்கை தற்போது தற்காலிகமாக நிறைவேறியுள்ளது.
அதுவும் போக்குவரத்து முடங்கியுள்ள சூழலில், அவசர கால வாகனங்களை மட்டும் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் கார் போன்ற வாகனங்கள் இல்லாமல் தற்போது சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆனால் ஊரடங்கு உத்தரவையும் மீறி ஒரு சிலர் வாகனங்களில் உலா வந்து கொண்டுதான் உள்ளனர்.
அவசியம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு கடுமையாக எச்சரிக்கை செய்துள்ள நிலையிலும், ஒரு சிலர் அதனை பொருட்படுத்தாமல் வாகனங்களில் உலா வருகின்றனர். அத்தகைய வாகன ஓட்டிகள் மீது தற்போது போலீசார் கடும் நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தேவையில்லாமல் வலம் வரும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸால் தற்போது வரை 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளதால், தமிழக அரசு சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அமைச்சர் எம்.சி.சம்பத் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பம்பரமாய் சுழன்று வரும் மத்திய, மாநில அரசுகளுக்கும், அதிகாரிகளுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டிய கடமை பொதுமக்களாகிய நமக்கு உள்ளது. எனவே உங்களை நீங்களே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். அவசியம் இல்லாமல் வீடுகளில் இருந்து வெளியே வராதீர்கள்.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?