Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
யாருமே எதிர்பாக்கல... பெட்ரோல், டீசல் விலை தடாலடியாக லிட்டருக்கு 4 ரூபாய் குறைந்தது... ஏன் தெரியுமா?
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தடாலடியாக லிட்டருக்கு 4 ரூபாய் குறைந்திருப்பதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் (Coronavirus) தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை கடந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ், ஈரான், ஜப்பான் மற்றும் கொரியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர பாகிஸ்தான் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளிலும் தற்போது ஒரு சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உலகின் ஏராளமான நாடுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஜப்பான் அரசாங்கம் அனைத்து பள்ளிகளையும் மூடும்படி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது சீனாதான். அங்கு ஆயிரக்கணக்கானோரின் உயிரை கொரோனா வைரஸ் பறித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடாக சீனா உள்ளதால், இங்கும் கொரோனா வைரஸ் பரவி விடுமோ? என்கிற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.
ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவி வருவது வருத்தத்திற்கு உரிய விஷயம் என்றாலும் கூட, இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை தற்போது கிடுகிடுவென குறைந்து வருகிறது. சர்வதேச பொருளாதார வளர்ச்சியில், கொரோனா வைரஸ் (Covid-19) தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.
அத்துடன் கச்சா எண்ணெய் தேவையிலும் கொரோனா வைரஸின் தாக்கம் தென்படுகிறது. எனவே சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய்யின் விலை கிடுகிடுவென சரிந்து வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை நேற்று (பிப்ரவரி 27) வெறும் 52 டாலர்களாக சரிவடைந்தது. இது கடந்த 13 மாத அளவில் இல்லாத அளவிற்கான விலை வீழ்ச்சியாகும்.
இதன் காரணமாக உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது. கடந்த ஜனவரி மாத மத்தியில் இருந்து இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை ஒரு லிட்டருக்கு சுமார் 4 ரூபாய் குறைந்துள்ளது. அதாவது இந்தியாவில் கடந்த ஜனவரி மாத மத்தியில் இருந்து, பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.74 ரூபாயும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 4.41 ரூபாயும் சரிவடைந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 71.96 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 64.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இன்னும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை சரிவடைவது இந்தியா போன்ற நாடுகளுக்கு உண்மையிலேயே நல்ல விஷயம்தான்.
ஏனெனில் இந்தியா உள்பட சில நாடுகள் கச்சா எண்ணெய் தேவைக்கு பெரும்பாலும் இறக்குமதியைதான் நம்பியுள்ளன. இதில், இந்தியாவோ தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்து கொள்கிறது. எனவேதான் இந்தியாவிற்கு இது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
அதேபோன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வருவதால், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போதைய விலை வீழ்ச்சியை வாகன ஓட்டிகளுக்கு கிடைத்த சிறிய நிவாரணம் என கூறலாம்.
Note: Images used are for representational purpose only.
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!