Just In
- 27 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... கெத்து காட்டும் கோவை கார் ஓனர்...
கொரோனா பரவுவதை தடுப்பதற்காக, வெறும் 1,500 ரூபாய் செலவில், சூப்பரான வழி ஒன்றை, கோவை கார் உரிமையாளர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.
கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவலை கட்டுப்படுத்துவதற்காக, இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைந்திருக்க வேண்டிய இந்த ஊரடங்கு, மே 3ம் தேதி வரை, மே 17ம் தேதி வரை என நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்தது. ஆனால் மே 17ம் தேதியும் ஊரடங்கு முடிவுக்கு வரவில்லை.
அதற்கு பதிலாக வரும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கில் தற்போது ஒரு சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், பொது போக்குவரத்து வாகனங்களுக்கு படிப்படியாக அனுமதி வழங்கப்பட்டு வருவதும் ஒன்றாகும். இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பஸ், ரயில், விமானம், ஆட்டோ, ரிக்ஸா ஆகிய பொது போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படுவதில்லை.
ஆனால் தற்போது பஸ், ரயில், விமான சேவைகளை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் ஆயத்தமாகி வருகின்றன. அத்துடன் ஒரு சில இடங்களில் ஆட்டோ, டாக்ஸிகளை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் முக்கியமானவர்கள்.
தினசரி வருவாயை நம்பியுள்ள அவர்கள், ஊரடங்கால் வேலையிழந்து, குடும்பம் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் தற்போது மீண்டும் ஆட்டோ, டாக்ஸிகளின் சேவை தொடங்கியுள்ளதால், அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் ஆட்டோ, டாக்ஸி, கேப் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய மக்கள் எந்த அளவிற்கு முன்வருவார்கள்? என்பது சந்தேகமாக உள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக சொந்த கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வதைதான் பயணிகள் பாதுகாப்பானதாக கருதுவார்கள் எனவும், எனவே பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதை அவர்கள் தவிர்க்க கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பொது போக்குவரத்து வாகனங்களில் சமூக விலகலை உறுதி செய்வது உண்மையிலேயே சவாலான விஷயம்தான்.
ஆனால் கோவையை சேர்ந்த வாடகை கார் உரிமையாளர் ஒருவர், தனது வாகனத்தில் சமூக விலகலை உறுதி செய்வதற்காக வித்தியாசமான ஒரு முயற்சியை எடுத்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அமர்நாத். வாடகை கார் உரிமையாளரான இவர், சமூக விலகலை உறுதி செய்யும் வகையில், தனது காரின் இன்டீரியரில் ஒரு சில மாடிஃபிகேஷன்களை செய்துள்ளார்.
இதன்படி காரின் இன்டீரியரில், கிருமி நாசினி மூலமாக சுத்தம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் தடுப்புகளை அவர் அமைத்துள்ளார். இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் உதவியுடன், காரின் இன்டீரியர் தனித்தனி கேபின்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டிரைவர் மற்றும் பயணிகளுக்கு இடையே சமூக விலகல் உறுதி செய்யப்படும்.
தனித்தனியாக அமர்ந்து பயணம் செய்ய முடியும் என்பதால், டிரைவர் மற்றும் பயணிகளுக்கு இடையே 'பிஸிக்கல் கான்டாக்ட்' தவிர்க்கப்படும். இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் உதவியுடன் கொரோனா அச்சமின்றி பயணிகள் பயணம் செய்யலாம். கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை இந்த ஸ்க்ரீன் குறைக்கும்.
பிலால் என்ற வடிவமைப்பாளர்தான், அமர்நாத்தின் காருக்குள் இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் மாடிஃபிகேஷனை செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'வெளிநாடுகளில் இயங்கும் வாடகை கார்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக என்னென்ன மாற்றங்களை செய்துள்ளனர் என ஒரு மாதமாக ஆய்வு செய்தோம்.
இதில், செலவு குறைவாக இருந்த மாடலை தேர்வு செய்து, அதற்கு ஏற்ப வடிவமைத்துள்ளோம்'' என்றார். இந்த மாடிஃபிகேஷனை செய்வதற்கு, 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை மட்டுமே செலவாகும் எனவும் பிலால் கூறியுள்ளார். குறைவான செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு நடவடிக்கை பயணிகளிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது.
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!