கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... நச்சுனு ஒரு முடிவை எடுத்த டெல்லி அரசு... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸை ஒழித்து கட்டுவதற்காக டெல்லி அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... நச்சுனு ஒரு முடிவை எடுத்த டெல்லி அரசு... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுப்பதற்காக இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைந்திருக்க வேண்டிய இந்த ஊரடங்கு மே 3, மே 17 என நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்து, தற்போது மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... நச்சுனு ஒரு முடிவை எடுத்த டெல்லி அரசு... என்னனு தெரியுமா?

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து பஸ், ரயில் மற்றும் விமானம் ஆகிய பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. அத்துடன் ஆட்டோ, டாக்ஸி ஆகிய வாகனங்களை இயக்குவதற்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. தனியார் வாகனங்கள் சாலைக்கு வருவதற்கும், ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

MOST READ: பருவமழை வரப்போகுது... உங்க வண்டிக்கு எக்ஸ்ட்ரா கவனிப்பு ரொம்ப முக்கியம்... என்ன பண்ணணும்னு தெரியுமா?

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... நச்சுனு ஒரு முடிவை எடுத்த டெல்லி அரசு... என்னனு தெரியுமா?

அரசின் எச்சரிக்கையை மீறி, தேவையே இல்லாமல் வெளியே சுற்றியவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இதன்படி அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அதன் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... நச்சுனு ஒரு முடிவை எடுத்த டெல்லி அரசு... என்னனு தெரியுமா?

இதே பாணியில் இந்தியா முழுவதும் காவல் துறையினரால் இன்னும் பல லட்சக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஊரடங்கில் தற்போது படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பயணங்களுக்கும், வாகனங்களை இயக்குவதற்கும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... நச்சுனு ஒரு முடிவை எடுத்த டெல்லி அரசு... என்னனு தெரியுமா?

இதனால் சாலைகளில் தற்போது அதிக அளவிலான கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை காண முடிகிறது. அதேபோல் பஸ் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கும் பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஒரு சில இடங்களில் பஸ் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு விட்டது. அத்துடன் ஆட்டோ, டாக்ஸிகளை இயக்குவதற்கும் படிப்படியான அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... நச்சுனு ஒரு முடிவை எடுத்த டெல்லி அரசு... என்னனு தெரியுமா?

மத்திய அரசு தனது தரப்பில் ரயில், விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து கொண்டுள்ளது. தற்போது அதிகளவிலான வாகனங்கள் சாலைக்கு வர தொடங்கியுள்ள நிலையில், அவற்றை அடிக்கடி கிருமி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிருமி நாசினி மூலமாக வாகனங்களை சுத்தம் செய்யும் தொழில் வாய்ப்பை பலர் ஏற்படுத்தி கொள்ளலாம்.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... நச்சுனு ஒரு முடிவை எடுத்த டெல்லி அரசு... என்னனு தெரியுமா?

இந்த சூழலில், பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்களுக்கு கிருமி நீக்கம் செய்யும் சேவைகளை தொடங்குவது குறித்து டெல்லி அரசு தற்போது ஆலோசனை செய்து வருகிறது. டெல்லி போக்குவரத்து துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''டெல்லியில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் இந்த சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... நச்சுனு ஒரு முடிவை எடுத்த டெல்லி அரசு... என்னனு தெரியுமா?

இதன் மூலம் பொது மற்றும் தனியார் வாகனங்கள், மிகவும் குறைவான கட்டணத்தில், கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படும். இன்னும் ஒரு வாரத்திற்குள், பெட்ரோல் பங்க்குகளில் இந்த சேவையை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்'' என்றார். வாகனங்களை கிருமி நீக்கம் செய்வது தொடர்பாக டெல்லி அரசு ஏற்கனவே சில உத்தரவுகளை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... நச்சுனு ஒரு முடிவை எடுத்த டெல்லி அரசு... என்னனு தெரியுமா?

இதன்படி பேருந்துகள், டாக்ஸிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஸாக்கள் உள்ளிட்ட வாகனங்களை ஒவ்வொரு ட்ரிப் முடிந்த பிறகும் கிருமி நீக்கம் செய்வதை டெல்லி அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த வரிசையில்தான் தற்போது பெட்ரோல் பங்க்குகளில், வாகனங்களுக்கு கிருமி நீக்கம் செய்யும் சேவைகளை வழங்க போக்குவரத்து துறை திட்டமிட்டு வருகிறது.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... நச்சுனு ஒரு முடிவை எடுத்த டெல்லி அரசு... என்னனு தெரியுமா?

சுமார் 2 மாதங்களுக்கு பிறகு, டெல்லியில் கடந்த மே 19ம் தேதி முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் வாகனங்களை இயக்குவதற்கும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக டெல்லி சாலைகளில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலை திரும்பி வருகிறது.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... நச்சுனு ஒரு முடிவை எடுத்த டெல்லி அரசு... என்னனு தெரியுமா?

டெல்லியில் கடந்த மே 19ம் தேதியில் இருந்து, டெல்லி போக்குவரத்து கழகத்தின் (DTC - Delhi Transport Corporation ) டிடிசி மற்றும் க்ளஸ்ட்டர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் இந்த பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... நச்சுனு ஒரு முடிவை எடுத்த டெல்லி அரசு... என்னனு தெரியுமா?

இதன்படி டெல்லியில் கடந்த மே 19ம் தேதி 2,259 டிடிசி மற்றும் க்ளஸ்ட்டர் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை கடந்த மே 20ம் தேதி 3,535 ஆகவும், மே 21ம் தேதி 3,983 ஆகவும் உயர்ந்தது. இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை போலவே, பயணிகளின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து கொண்டுள்ளது.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... நச்சுனு ஒரு முடிவை எடுத்த டெல்லி அரசு... என்னனு தெரியுமா?

இதன்படி கடந்த மே 19ம் தேதி 1,57,731 பயணிகள் பயணம் செய்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை கடந்த மே 20ம் தேதி 3,28,484 ஆகவும், மே 21ம் தேதி 3,52,661 ஆகவும் உயர்ந்துள்ளது. மற்ற அரசு துறைகளான காவல், வருவாய் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கும், பேருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Saturday, May 23, 2020, 17:34 [IST]
English summary
Covid-19: Delhi Transport Department Planning To Start Vehicle Disinfection Services At Petrol Bunks. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+