Just In
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 3 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
- 3 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
Don't Miss!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொரோனா வைரஸ் அச்சத்தால் வீடுகளில் முடங்கும் மக்கள்... இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்தது
கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் (Coronavirus) குடும்பத்தை சேர்ந்த கோவிட்-19, ஒட்டுமொத்த உலகிற்கே தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்போது வரை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுதவிர 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளும்படியும் அந்தந்த நாட்டு அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு அஞ்சுவதால், போக்குவரத்து துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமான நிறுவனங்கள்தான் பொருளாதார ரீதியில் மிகப்பெரும் இழப்பை சந்தித்துள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதால், ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழலில், நடப்பு மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், இந்தியாவின் எரிபொருள் தேவை 10-11 சதவீதம் குறைந்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், தொழில்துறை நடவடிக்கைகள் குறைந்து போயிருப்பதாலும்தான் இந்தியாவின் எரிபொருள் தேவை இந்தளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது.
நடப்பு மார்ச் மாதத்தில், 19.5 மில்லியன் டன்கள் பெட்ரோலிய பொருட்களை மட்டுமே இந்தியா நுகர்ந்துள்ளது. இது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அனைத்து பெட்ரோலிய பொருட்களின் விற்பனையிலும் கொரோனா வைரஸின் தாக்கத்தை பெட்ரோலிய தொழில் துறை கண்டுள்ளது.
2020ம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் இரு வாரங்களில், திரவ எரிபொருள்களுக்கான ஒட்டுமொத்த தேவை 10-11 சதவீதம் சரிந்துள்ளது'' என கூறப்பட்டுள்ளது. கொரோனாவைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், பயணங்கள் தொடர்பாக வழங்கப்பட்டு வரும் ஆலோசனைகள் ஆகிய காரணங்களால் எரிபொருள் தேவை குறைந்துள்ளது.
பொதுமக்கள் தற்போது பயணங்களை பெருமளவில் குறைத்து கொள்ள தொடங்கி விட்டனர். எனவே வாகன பயன்பாடு குறைந்துள்ளது. இதுதவிர தொழில்துறையின் நடவடிக்கைகளிலும் மந்தநிலை நிலவி வருவதால், எரிபொருள் தேவை குறைந்துள்ளது. டீசல் விற்பனையானது 13 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ள நிலையில், ஜெட் எரிபொருள் விற்பனை 10 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது.
அதேசமயம் பெட்ரோலின் விற்பனை 2 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. அதே நேரத்தில் ஏவியேஷன் டர்பைன் எரிபொருளின் (Aviation Turbine Fuel - ATF) விற்பனையானது பத்து சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. கூடிய விரைவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறினால், வரும் காலங்களில் போக்குவரத்து துறையின் நிலைமை மோசமாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Note: Images used are for representational purpose only.
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!