Just In
- 52 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 57 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சூப்பர் சிஎம்... நச்சுனு ஒரு காரியத்தை செய்த கெஜ்ரிவால்... முதல்வன் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்
கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் செய்து வரும் உதவிகள் கவனம் ஈர்த்துள்ளன.
உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ், உயிர்களை பறிப்பதுடன் சேர்த்து, பொருளாதாரத்தையும் மிக கடுமையாக சீர்குலைத்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. எனவே மக்கள் வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வருமானத்திற்கு வழி இல்லாததால் அவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
இந்திய மக்களும் இதற்கு விதி விலக்கு அல்ல. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பஸ், ரயில் மற்றும் விமானம் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆட்டோ, டாக்ஸி மற்றும் எலெக்ட்ரிக் ரிக்ஸா போன்ற வாகனங்களும் இயக்கப்படுவதில்லை.
ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலானோர் வீடுகளில் இருந்து வெளியே வருவதில்லை. மேலும் பொது போக்குவரத்து வாகனங்களும் இயக்கப்படாததால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
ஊரடங்கு உத்தரவு எதிரொலியால், ஆட்டோ, டாக்ஸி மற்றும் எலெக்ட்ரிக் ரிக்ஸா போன்ற வாகனங்களின் டிரைவர்களும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்த வாகனங்களின் டிரைவர்களில் பெரும்பாலானோர் தினசரி கிடைக்கும் வருமானம் மூலம், குடும்பத்தை நடத்துபவர்கள் என்பதால், அவர்களின் நிலைமை மோசமாகியுள்ளது.
இந்த சூழலில், அவர்களுக்கு உதவி செய்ய டெல்லி அரசு முன்வந்துள்ளது. ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கியிருக்கும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை, மத்திய அரசும் மற்றும் அனைத்து மாநில அரசுகளும் செய்து வருகின்றன. இந்த வரிசையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.
டெல்லி அரசு ஏற்கனவே 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளது. இதன் நீட்சியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று (ஏப்ரல் 2) வெளியிட்ட ஒரு அறிவிப்பும் கவனம் ஈர்த்துள்ளது. இதன்படி ஆட்டோ, டாக்ஸி மற்றும் எலெக்ட்ரிக் ரிக்ஸா டிரைவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயை டெல்லி அரசு வழங்கவுள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக ஓடாமல் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோ, டாக்ஸி மற்றும் எலெக்ட்ரிக் ரிக்ஸாக்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களின் டிரைவர்கள் ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் இந்த வாகனங்களின் டிரைவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மக்கள் யாரும் பட்டினியை எதிர்கொள்ள கூடாது எனவும், அதை நான் உறுதி செய்வேன் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அதே நேரத்தில் ஆட்டோ, டாக்ஸி மற்றும் எலெக்ட்ரிக் ரிக்ஸா போன்ற பொது போக்குவரத்து வாகனங்களின் டிரைவர்களுக்கான உதவி தொகையானது, அடுத்த 7-10 நாட்களுக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்காத காரணத்தால், பரபரப்பான இந்திய சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. இதை பயன்படுத்தி கொண்டு, கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் ஒரு சிலர் ஜாலி ரைடு சென்று வருகின்றனர். இப்படி வெறிச்சோடிய சாலைகளில் வாகனங்களை இயக்கும் வாய்ப்பு இனி கிட்டாது என அவர்கள் கூறுகின்றனர்.
கோவிட்-19 வைரஸின் தீவிரத்தை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது இதன்மூலம் தெரிகிறது. எனவே இப்படி தேவை இல்லாமல் ஊர் சுற்றும் வாகன ஓட்டிகள் மீது காவல் துறை தீவிர நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. அபராதம் விதிப்பது, வழக்கு பதிவு செய்வது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற அதிரடியான நடவடிக்கைகளை காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்.
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்