Just In
- 1 hr ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 1 hr ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- 3 hrs ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- 3 hrs ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Sports சிஎஸ்கே அணியில் 35 வயது வீரருக்கு கல்தா..வாய்ப்பை வீணடித்ததால் முடிவு.. ரூ.8 கோடி வீரருக்கு வாய்ப்பு
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Movies யுவன் ஷங்கர் ராஜா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்.. அனைத்துக்கும் காரணம் GOAT பாடல்?
- Technology இனி Nokia இல்ல போரிங்.. 2 டிஸ்பிளே கொண்ட போனை அறிமுகம் செய்த HMD.. எந்த மாடல்?
- News உலகிற்கே ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. ஏற்றுமதி செய்ய போகும் ராணிப்பேட்டை.. ஆட்டோமொபைல் புரட்சி
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பக்கா ஜென்டில்மேன்... விவிஐபி-யின் காரை தூக்கிய தமிழ்நாடு போலீஸ்... யாரென்று தெரிந்ததும் ஆச்சரியம்
யாரென்று தெரியாமல் விவிஐபி ஒருவரின் காரை தமிழக போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. தமிழக அளவில் பார்த்தால், தலைநகர் சென்னை கொரோனா வைரஸின் கோர பிடியில் சிக்கி தவித்து வருகிறது. எனவே சென்னையில் தற்போது மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னையில் வாகனங்களை இயக்குவதற்கு காவல் துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் வாகனங்களை பயன்படுத்த கூடாது என காவல் துறை தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவல் துறையின் இந்த எச்சரிக்கையை மீறுபவர்களின் வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த வரிசையில் விவிஐபி ஒருவரின் காரையும் சென்னை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். அவர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதுடன், அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங்தான் அந்த விவிஐபி. இந்த சம்பவத்தில் மற்றொரு சுவாரஸ்யமும் உள்ளது. காரில் வந்தது ராபின் சிங் என்பது போலீசாருக்கு தெரியவில்லை. இந்த விஷயம் தெரியாமலேயே காரை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஜூன் 20ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற்றதாக கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் முன்னணி கிரிக்கெட் வீரராக வலம் வந்த ராபின் சிங் தற்போது சென்னையில் தங்கியிருந்து பிஸ்னஸ் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இல்லம் சாஸ்திரி நகரில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சென்னையில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், காய்கறி, மளிகை சாமான்களை வாங்குவதற்காக, ராபின் சிங் தனது காரில் திருவான்மியூர் சென்றுள்ளார்.
பழைய தலைமுறை ஹோண்டா சிஆர்-வி (Old-generation Honda CR-V) காரில் ராபின் சிங் பயணம் செய்துள்ளார். வழியில் சாஸ்திரி நகர் டிராபிக் போலீசார், ராபின் சிங்கின் காரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்க செல்வதாக ராபின் சிங் கூறியுள்ளார்.
ஆனால் இதுபோன்ற தேவைகளுக்கு நடந்துதான் செல்ல வேண்டும் என போலீசார் கூறியுள்ளனர். எனினும் காரில் இருந்தவர் ராபின் சிங் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. இதன்பின் ராபின் சிங்கின் காரை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதற்கு ராபின் சிங் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
தான் யார்? என்பதை ராபின் சிங் போலீசாரிடம் கூறவே இல்லை என தெரிகிறது. காவல் துறையினர் காரை பறிமுதல் செய்து விட்ட நிலையில், வேறு ஒரு காரை வரவழைத்து ராபின் சிங் அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்தனர்.
அத்துடன் ராபின் சிங்கிற்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் காவல் துறை உயரதிகாரி ஒருவர் மூலமாகதான், தாங்கள் பறிமுதல் செய்தது ராபின் சிங்கின் கார் என்ற தகவல் சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதன் பிறகே இந்த விவகாரம் வெளி உலகத்திற்கு தெரியவந்தது.
ஆனால் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், கண்ணியத்துடன் நடந்து கொண்டதாகவும் காவல் துறையினர் பாராட்டு பத்திரம் வாசித்துள்ளனர். ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்துவதில் தமிழக காவல் துறை கண்டிப்புடன் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக தற்போது வரை சுமார் 5 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கின் காரை சென்னை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் தொடர்பாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், தேவை இல்லாமல் வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள். இது போலீசாரின் நடவடிக்கையில் இருந்தும், கொரோனா வைரஸிடம் இருந்தும் உங்களை காப்பாற்றும்.
-
டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
-
பெங்களூருக்கு போறவங்க ஒரு முறையாவது இந்த பஸ்ஸில் டிராவல் பண்ணி பாருங்க!! மொத்தமும் எலக்ட்ரிக்...
-
மைலேஜில் டூவீலர்களே ஒரு அடி பின்னாலதான் நிக்கணும்! புது அவதாரம் எடுக்கிறது மாருதி ஸ்விஃப்ட்! புக்கிங் தொடக்கம்