Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
20 ஆயிரம் கார்களில் உபேர் செய்து வரும் அதிரடி... கொரோனா வைரஸ் அச்சம் இல்லாமல் நீங்கள் பயணிக்கலாம்...
கொரோனா வைரஸ் அச்சம் இல்லாமல் பயணம் செய்வதற்கான நடவடிக்கைகளை உபேர் நிறுவனம் எடுத்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது கட்டுக்கடங்காமல் பரவ தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களில், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் முக்கியமானவர்கள். ஊரடங்கு அமலுக்கு வந்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் வேலையிழந்தனர். தற்போது ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக ஆட்டோ, டாக்ஸிகள் ஓட தொடங்கியிருந்தாலும் அவற்றில் பயணிக்க மக்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே அவற்றின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி உபேர் நிறுவனம் சுமார் 20 ஆயிரம் கார்களில், பாதுகாப்பு திரைகளை பொருத்தி வருவதாக அறிவித்துள்ளது. உபேர் கார்களில் பயணம் செய்பவர்கள் மற்றும் ஓட்டுனர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உபேர் நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்களின்படி, சுமார் 8 ஆயிரம் கார்களில் ஏற்கனவே பாதுகாப்பு திரை பொருத்தப்பட்டு விட்டது. பாதுகாப்பு திரைகளை பொருத்துவதற்கான செலவை உபேர் நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது. எனவே ஓட்டுனர்கள் இலவசமாக பொருத்தி கொள்ளலாம். கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை இந்த பாதுகாப்பு திரை குறைக்கும்.
டிரைவர் மற்றும் பயணிகளுக்கு இடையே பொருத்தப்படும் கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் திரைகள்தான், பாதுகாப்பு திரை என குறிப்பிடப்படுகிறது. இந்த பாதுகாப்பு திரை மூலம் காரின் உட்புறத்தை தனித்தனி பிரிவுகளாக பிரிக்க முடியும். எனவே சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் இந்த பாதுகாப்பு திரைகள் உதவி செய்கின்றன.
இந்த புதுமையான மற்றும் பாதுகாப்பான முயற்சியை, உபேர் மட்டுமல்லாது, ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் பலரும் முன்னெடுத்து வருகின்றனர். மேலும் சொந்த பயன்பாட்டிற்கு கார் வைத்துள்ளவர்கள் பலரும் கூட தங்கள் வாகனத்தில் இந்த பாதுகாப்பு திரையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொருத்தி கொண்டிருப்பதை தற்போது காண முடிகிறது.
தமிழக அமைச்சர் சரோஜா கூட தற்போது தனது காரில் இந்த பாதுகாப்பு திரைகளை பொருத்தியுள்ளார். கார் வைத்திருக்கும் பலரும் ஆர்வம் காட்டுவதால், பாதுகாப்பு திரைகளை பொருத்தி தரும் தொழில் தற்போது சூடுபிடித்துள்ளது. ஆனால் பாதுகாப்பு திரை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்கள் அதிகளவில் முன்வருவார்களா? என்பது சந்தேகமே.
கொரோனா அச்சம் காரணமாக சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் பொதுமக்கள் தற்போது பாதுகாப்பானதாக கருதுகின்றனர். எனவே வரும் மாதங்களில் புதிய கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
Note: Images used are for representational purpose only.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!