Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்டா முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கார் டயர் வெடித்தாலும் பெரும் விபத்திலிருந்து சுரேஷ் ரெய்னா தப்பியது எப்படி?
சுரேஷ் ரெய்னா ஓட்டிச் சென்ற ரேஞ்ச்ரோவர் கார் டயர் வெடித்தது. இந்த சம்பவத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறித்து பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா துலிப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புளூ அணியின் கேப்டனாக இருக்கிறார். இந்த நிலையில், கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள திட்டமிட்டார்.
இதற்காக, காஸியாபாத் நகரிலிருந்து கான்பூருக்கு ரேஞ்ச்ரோவர் சொகுசு எஸ்யூவி காரில் சுரேஷ் ரெய்னா நேற்று முன்தினம் இரவு பயணித்தார். நள்ளிரவு 2 மணி அளவில் எட்டாவா நகரில் உள்ள ஃப்ரண்ட்ஸ் காலனி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக காரின் பின்புற டயர்களில் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஆனால், கார் லாவகமாக நிறுத்தப்பட்டதால், விபத்தில் இருந்து சுரேஷ் ரெய்னா அதிர்ஷ்டவமாக தப்பினார்.
அந்த ரேஞ்ச்ரோவர் காரில் ஸ்பேர் வீல் இல்லாததால், நடுவழியில் சுரேஷ் ரெய்னா நீண்ட நேரம் உதவி கிடைக்காமல் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்தவர்கள் உதவியுடன் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
Recommended Video
தகவல் அறிந்து வந்த போலீசார் ரெய்னாவுக்கு மாற்று கார் ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்பி வைத்தனர். கார் டயர் வெடித்தது சாதாரணமான விஷயமாக இருந்தாலும், சுரேஷ் ரெய்னாவின் கார் சீரான வேகத்தில் சென்றதாலேயே அவர் உயிர் தப்பி இருக்கிறார்.
அவரது கார் அதிவேகத்தில் சென்றிருந்தால், நிச்சயம் பெரிய அளவிலான விபத்தில் சிக்கி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். நிதானமான வேகமே அவரது உயிரை காப்பாற்றி இருக்கிறது என்றும் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவத்தின் மூலமாக அதிவேகம் என்பது உயிரை கொல்லும் காரணியாக கூற முடியும். சீரான வேகம் இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் இருந்து உயிரை காப்பாற்ற உதவும்.
கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் சாலையில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரும் டயர் வெடித்து பயங்கர விபத்தில் சிக்கியது. டயர் வெடித்த வேகத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்ததால், பின்னால் வந்த வாகனங்களும் மோதி பெரும் விபத்தாக மாறியது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர்.
எனவே, கார் ஓட்டும்போது ரெய்னா போன்று நிதான வேகத்தை கடைபிடித்தால், இதுபோன்று உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை மனதில் வைப்பது அவசியம்.
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!