Just In
- 1 hr ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 1 hr ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 2 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 3 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொரோனாவுக்கு மத்தியில் இது வேறயா... டவ்-தே புயலால் கப்பல் மூழ்கியதில் 37 பேர் பலி- 38 பேர் கதி என்ன?
கொரோனாவின் இரண்டாவது அலையால் பலர் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டிற்குள்ளேயே முடக்கியுள்ளனர். நேற்றோ அல்லது இன்றோ இந்த நிலைமை கிடையாது, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இதே நிலை தான்.
இது ஒருபுறம் இருக்க, அதிதீவிர புயலாக மையம் கொண்டிருந்த டவ்-தே சமீபத்தில் குஜராத், மஹாராஷ்டிரா என இந்தியாவின் மேற்கு மாநிலங்களை பந்தாடி சென்றுள்ளது. இது அந்த மாநில மக்களுக்கு மேலும் ஒரு துயரத்தை உருவாக்கியுள்ளது.
இந்த புயலினால் மின்சாரம் இல்லாமல், போதிய தண்ணீர் வசதி இல்லாமல், பசியால் மக்கள் போராடிவரும் நிலையில், டவ்-தே புயல் கோரத்தாண்டவம் ஆடியதில் அரபி கடலில் ஓ.என்.ஜி.சி-க்கு சொந்தமான எண்ணெய் துரப்பண கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளது.
இதில் இந்த கப்பலில் இருந்த 37 பேர் இதுவரையில் பலியாகியுள்ளனர். மேலும் காணாமல் போன 38 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலினால் கப்பலின் நங்கூரங்கள் அறுப்பட்டதில் கப்பல் ஒரு பக்கமாக கடலுக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த கப்பலிலும் அருகில் இருந்த கப்பல்களிலும் தங்கி பணிபுரிந்து வந்த 800க்கும் அதிகமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஒரே கப்பலில் இருந்த 37 பேர் கடலில் மூழ்கி மரணம் அடைந்திருப்பது சக பணியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்தீவுகள் அருகே அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் கடந்த 17ஆம் தேதி குஜராத்தில் கரையை கடந்தது. இந்த புயலினால் மஹாராஷ்டிரா, குஜராத் மட்டுமின்றி அதன் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
கேரளாவில் டவ்-தே புயலால் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கர்நாடகாவில் 200க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்கள் மிக மோசமான பாதிப்பை சந்திள்ளன.
மும்பையில் 70 சதவீத மரங்கள் முறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குஜராத்தில் டவ்-தே புயலின் சீற்றத்துக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 49 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 வருடங்களுக்கு பிறகு குஜராத்தில் இவ்வாறு தீவிரமான புயல் தாக்கி சென்றுள்ளது.
மின்சார துண்டிப்பால் குஜராத்தில் பல மாவட்டங்களில் செல்போன் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பார்வையிட்டுள்ளார். நமது தமிழகத்தில் கூட மேற்கு மாவட்டங்கள் சிலவற்றில் மழை வெளுத்து வாங்கியது.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!