Just In
- 51 min ago எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- 1 hr ago ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
- 3 hrs ago உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
- 8 hrs ago பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
Don't Miss!
- News மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்? முக்கிய ஆதாரங்களை வெளியிடும் அரவிந்த் கெஜ்ரிவால்! EDக்கு டிவிஸ்ட்
- Movies ஸ்ருதிஹாசன் உடன் பார்ட்டி, பப் என சுற்றும் லோகேஷ் கனகராஜ்.. லீக்கான வீடியோ.. ரசிகர்கள் ஷாக்!
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Finance ஆப்பிரிக்காவில் மாஸ்காட்டும் இந்திய நிறுவனங்கள்..TVS எங்க ஊர் பிராண்ட்-ன்னு சண்டை போடுறாங்கப்பா..!!
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Lifestyle 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
10 ஆயிரம் ரூபாய் அபராதம்... வாகனங்களுக்கு அந்த சான்றிதழை பெறுவதில் உரிமையாளர்கள் தீவிரம்...
வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவதில் வாகன உரிமையாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இந்தியாவின் பல்வேறு நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றன. தலைநகர் டெல்லி இதற்கு சரியான எடுத்துக்காட்டு. இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்னைகளுக்கு தொழிற்சாலைகள் ஒரு காரணம் என்றால், மறுபக்கம் வாகனங்களும் மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன.
பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை, காற்றை அதிகம் மாசுபடுத்துகிறது. எனவே காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் திருத்தியமைக்கப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதில், பியூசிசி எனப்படும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUCC - Pollution Under Control Certificate) இல்லாத வாகனங்களுக்கான அபராத தொகை 1,000 ரூபாயில் இருந்து அதிரடியாக 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. எனவே புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த உடனேயே பியூசிசி சான்றிதழை பெறுவதில் வாகன உரிமையாளர்கள் தீவிரம் காட்டினர்.
அது தற்போது வரை தொடர்கிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர், பியூசிசி சான்றிதழ் பெறுவது அதிகரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், 8.3 லட்சம் வாகன உரிமையாளர்கள் பியூசிசி சான்றிதழ் பெறுவதற்காக தங்கள் வாகனங்களை சோதனை செய்தனர்.
ஆனால் நடப்பாண்டு இதே கால கட்டத்தில், அதாவது கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெல்லியில் உள்ள சுமார் 1,000 மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கும் மையங்களில், 9.2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 2019ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஜூன், ஜூலை மாதத்தில் சுமார் 1 லட்சம் வாகனங்கள் அதிகமாக பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''காற்றை மாசுபடுத்தும் வாகனங்களுக்கு எதிராக நாங்கள் கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. நடவடிக்கை கடுமையாக இல்லாமல் இருந்திருந்தால், இந்த எண்ணிக்கையும் குறைவாகதான் இருந்திருக்கும்.
ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் அதிகளவிலான வாகனங்கள் சாலைக்கு வர தொடங்கின. அப்போது முதல் அனைத்து வாகனங்களும் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக 50 குழுக்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களுக்கு காவல் துறையினரும் அபராதம் விதித்து வருகின்றனர்.
தற்போது அபராதம் மிகவும் கடுமையாக இருப்பதால், வாகன உரிமையாளர்கள் முறையாக மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வைத்திருப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்'' என்றனர். தலைநகர் டெல்லிதான் காற்று மாசுபாடு பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி என்பதால், அங்கு நடவடிக்கை மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அபராத தொகைகளை உயர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன் மட்டுமல்லாது, இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைளையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலான மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தாலும் காற்று மாசுபாடு பிரச்னை கட்டுக்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்
-
ஹைவே நம்பருக்கு பின்னால் இவ்வளவு மேட்டரு இருக்கா!! சும்மா கண்ணை மூடி சூஸ் பண்ற விஷயம் கிடையாது!
-
அகமதாபாத் வேற லெவலில் மாற போகுது!! புல்லட் இரயிலில் இருந்து எல்லாமே வருது... ஓப்பனாக பேசிய மத்திய அமைச்சர்!