Just In
- 15 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 2 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News லண்டன் To சென்னை பறந்து வந்த மூத்த குடிமகன்! 1.5 லட்சம் செலவு! ஓட்டுக்கு வேட்டு வைத்த அதிகாரிகள்!
- Movies பீரியட்ஸ் நேரத்தில் அதை குடிக்க மாட்டேன்.. நான் ரொம்ப சுயநலக்காரி.. பிகில் நடிகை பகீர்!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஒரே நாளில் சிக்கிய ஆயிரக் கணக்கான இளைஞர்கள்... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட டெல்லி போலீஸ்..!
டெல்லி போலீஸின் அதிரடி நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போலீஸிடம் வசமாக சிக்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக வட இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக ஹோலி பண்டிகை இருக்கின்றது.
இந்த பண்டிகை தினத்தில் கூட்டம் கூட்டமாக குழுந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இணைந்து கலர் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி விளையாடுவார்கள்.
இந்த பண்டிகை வட இந்தியாவில் மட்டுமின்றி தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் பரவ தொடங்கியிருக்கின்றது. இதற்கு வட இந்தியர்கள் இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் பரவியிருப்பதே காரணமாக இருக்கின்றது.
இதுமட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து பண்டிகைகளையும், அனைத்து மக்களும் ஜாதி, மதம் பேதமின்றி கொண்டாடுவதும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது.
மேலும், இத்தினத்தை பலர் கலர் பொடிகள் தூவி கொண்டாடும் அதே வேலையில் ஒரு சில இளைஞர்கள் மட்டும் மது அருந்தி கொண்டாடும் பழக்கத்தை வைத்திருக்கின்றனர்.
இதனை நிரூபிக்கின்ற வகையில் கடந்த காலங்களில் ஹோலி பண்டிகையின்போது நடைபெற்ற போக்குவரத்து சார்ந்து சம்பவங்கள் இருக்கின்றன.
இந்த இளைஞர்கள் மது அருந்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல், சில நேரங்களில் குடி போதையின் உற்சாகத்தில் ஜாலி ரைடு செல்லவும் முற்படுகின்றனர்.
அவ்வாறு, குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்கின்றது. இது பண்டிகனை தினத்தை சில குடும்பத்தினருக்க கருப்பு தினமாக மாற்றிவிடுகின்றது. இதனை முன்கூட்டியே தடுக்கும் வகையில், தலைநகர் டெல்லி போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அந்தவகையில், நடப்பாண்டில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பது குறிக்கோளாக செயல்பட்டனர்.
இதற்காக தலைநகர் டெல்லி முழுவதும் போலீஸார் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டனர். அதனடிப்படையில், செய்யப்பட்ட வாகன தணிக்கையில் பல குடிமகன்கள் குடித்துவிட்டு வாகனத்தை இயக்கியது கண்டறியப்பட்டது.
இதுமட்டுமின்றி, அன்றைய தினத்திலேயே பல்வேறு போக்குவரத்து விதிமீறல்வாதிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் அபராதச் செல்லாண் வழங்கப்பட்டது.
இதில், ஒட்டுமொத்தமாக ட்ரிங்க் அண்ட் டிரைவ் செய்ததாகக் கூறி 647 பேருக்கு இ-செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று 1,192 பேருக்கு ட்ரிபிள் ரைடிங்கிற்கான போக்குவரத்து வீதிமீறலுக்கும், 181 பேர் ட்ரிபிள் ரைடிங் சென்றதற்காகவும், 156 பேருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை இயக்கிய குற்றத்திற்காகவும் டெல்லி போலீஸார் அபராதச் செல்லாண்களை வழங்கியுள்ளனர்.
ஆகையால், ஹோலி பண்டிகை தினத்தில் மட்டுமே ஒட்டுமொத்தமாக 2,176 பேருக்கு அபராதச் செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.
முக்கியமாக ஹோலி பண்டிகையின்போது வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே போக்குவரத்து போலீஸார் இந்த பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை குறைக்கும் நோக்கிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணியின் நோக்கத்திற்கு ஏற்ப பல போக்குவரத்து விதிமீறல்வாதிகள் போலீஸாரிடம் தற்போது சிக்கியுள்ளனர். இதற்காக 170க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் 1,600க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!