அரசு பேருந்துகளில் இலவச பயணம்... வாகனங்கள் இயக்க புதிய கட்டுப்பாடு... டெல்லி அரசின் அதிரடி..!!
அரசு பேருந்துகளில் இலவச பயணம்... வாகனங்கள் இயக்க புதிய கட்டுப்பாடு... டெல்லி அரசின் அதிரடி..!!
டெல்லியில் நிலவும் காற்று மாசுப்பாட்டால் வேண்டாம் என்று வைத்த ஒரு திட்டத்தை டெல்லி அரசு வரும் திங்கள் முதல் அமல்படுத்த உள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

கடந்த சில நாட்களாகவே டெல்லியில் அதிக பனி மூட்டம் காணப்படுகிறது. மேலும் காற்று மாசு குறைபாடும் அதிகரித்து வருகிறது.

கடந்த தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்க டெல்லியில் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதனால் நிலவும் பனிக்காலத்தில் காற்று மாசு குறைபாடு அதிகளவில் இருக்காது என எண்ணப்பட்டது.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. டெல்லி மக்கள் பனிக்காலத்தில் சுவாசிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
Recommended Video


எங்கும் சென்றாலும் டெல்லி வாசிகள் மூக்கில் துணிக்கட்டிக்கொண்டு தான் நடக்கின்றனர். இதைப்பற்றி வரும் மீம்ஸூகளும் டிரென்டிக்கின்றன.

காற்று மாசுபடுவதை தவிர்க்கும் விதமாக வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் விதமாக புதிய முடிவை டெல்லி அரசு எடுத்துள்ளது.
Trending on Drivespark:

அதாவது வரும் 13 முதல் 17ம் தேதி வரை இரட்டைப்படை வாகனங்களை இயக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் 2 கட்டமாக கடந்த ஆண்டு நடந்தது.

ஆனால் 2 வது கட்டமாக நடைபெற்ற சோதனை ஓட்டம் தோல்வியடைந்ததை அடுத்து, அவசர காலங்களில் மட்டும் இரட்டைப்படை எண்கள் கொண்ட வாகனங்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.

டெல்லியில் பனிக்காலம் தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.

இதை அவசரநிலையாக கருதி டெல்லி அரசு, வரும் திங்கள் முதல் வெள்ளி வரை வாகனங்களுக்கான ஒற்றப்பைப்படை, இரட்டைப்படை பதிவு முறை அமல்படுத்தப்படும் என கூறியுள்ளது.

வாகனங்களுக்கான இந்த புதிய விதி அமலில் இருக்கும் நாள் வரை, டெல்லி மக்கள் மாநில அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று டெல்லி அரசு கூறியுள்ளது.

இதற்கான உத்தரவை டெல்லியின் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் அறிவித்தார்.
இத்திட்டம் மூலம் பொது போக்குவரத்தை அதிக மக்கள் பயன்படுத்துவார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்


Click it and Unblock the Notifications