சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் புதிய அரசாணை... விரைவில்...!!

சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் புதிய அரசாணை... விரைவில்...!!

By Azhagar

சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு புதிய நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை டெல்லி மாநிலத்தில் விரைவில் அமல்படுத்தயுள்ளார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

விபத்துகளை குறைக்க, உயிரழப்புகளை தடுக்க புதிய அரசாணை..!!

அதன்படி சாலை விபத்துகளில் படுகாயமடைந்து பாதிக்கப்படுவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை டெல்லி அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது.

விபத்துகளை குறைக்க, உயிரழப்புகளை தடுக்க புதிய அரசாணை..!!

டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கான செலவீனங்களை அரசே ஏற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்துகளை குறைக்க, உயிரழப்புகளை தடுக்க புதிய அரசாணை..!!

டெல்லியில் நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துகளில் மரணமடைந்தோரில் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்துள்ளது.

Recommended Video

Bangalore City Police Use A Road Roller To Crush Loud Exhausts
விபத்துகளை குறைக்க, உயிரழப்புகளை தடுக்க புதிய அரசாணை..!!

உரிய நேரத்தில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படாததே காரணம என சொல்லப்பட்டது.

புள்ளிவிவரங்களின் படி பார்த்தால், டெல்லியில் மட்டும் சுமார் 8000 சாலை விபத்துகள் ஆண்டுதோறும் நடக்கின்றன.

விபத்துகளை குறைக்க, உயிரழப்புகளை தடுக்க புதிய அரசாணை..!!

இதன்காரணமாக 15,000 முதல் 20,000 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். அவற்றில் பலரும் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் உயிரழந்துள்ளார்கள்.

விபத்துகளை குறைக்க, உயிரழப்புகளை தடுக்க புதிய அரசாணை..!!

தொடர்ந்து வரும் இழப்புகளை கருத்தில் கொண்டு தான் தற்போது டெல்லி அரசு பாதிக்கப்படுவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருகிறது.

விபத்துகளை குறைக்க, உயிரழப்புகளை தடுக்க புதிய அரசாணை..!!

இதற்கான அரசானையை டெல்லியின் துணை நிலை ஆளுநர் அனில் பாஜ்பாய்க்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது ஒப்புதலுக்கு பிறகு விரைவில் இதற்கான உத்தரவு நடைமுறைக்கு வரும்.

விபத்துகளை குறைக்க, உயிரழப்புகளை தடுக்க புதிய அரசாணை..!!

இலவச சிகிச்சை தொடர்பான அரசாணையில், விபத்து நடந்து ஒரு மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும்.

விபத்துகளை குறைக்க, உயிரழப்புகளை தடுக்க புதிய அரசாணை..!!

மருத்துவ குறிப்புகளில் அதை கோல்டன் ஹவர் என சொல்லப்படுகிறது. பாதிப்பட்டைந்தவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் அவர்களை காப்பாற்ற அதிக வாய்ப்புள்ளது.

விபத்துகளை குறைக்க, உயிரழப்புகளை தடுக்க புதிய அரசாணை..!!

நாட்டிலேயே கார் எண்ணிக்கை அதிகமாக உள்ள நகரம் டெல்லி. அதனால் சாலை விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவது அங்கு வாடிக்கையாகி உள்ளது.

விபத்துகளை குறைக்க, உயிரழப்புகளை தடுக்க புதிய அரசாணை..!!

சாலை விபத்துகளையும் மற்றும் அதனால் உயிரழப்போரின் எண்ணிக்கையும் குறைக்க டெல்லி அரசு அமல்படுத்தவிருக்கும் இந்த உத்தரவிற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர்.

Article Published On: Saturday, December 16, 2017, 11:17 [IST]
English summary
Read in Tamil: Delhi government to treat accident victims Free of Cost in all Hospitals. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+