Just In
- 1 hr ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 2 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 2 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- 3 hrs ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு ஜிபிஎஸ் டிவைஸ் மூலம் ஆப்பு வைத்த முதல்வர்
அரசு அதிகாரிகள் சிலர், அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, அதிரடியான சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் சிலர், அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, அதிரடியான சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக, அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் நாட்டின் தலைநகர் டெல்லியில் ஒரு சில அதிகாரிகள், ஒன்றுக்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்களை பயன்படுத்தி வருவதாக, தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வருகின்றன.
எனவே ஒரு அரசு அதிகாரி, ஒரே ஒரு அரசாங்க வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லி மாநில அரசின், பொது நிர்வாக துறை (General Administration Department) இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஒரு சில அரசு அதிகாரிகள், ஒன்றுக்கும் மேற்பட்ட கூடுதல் பொறுப்புகளை கவனித்து வருகின்றனர். இதை காரணம் காட்டி, அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்களை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் கூடுதல் பொறுப்புகளை கவனித்தாலும், ஒரு அதிகாரி ஒரு அரசாங்க வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே கூடுதலாக பயன்படுத்தி வந்த வாகனங்களை, அந்தந்த துறைகளின் தலைவர்களிடம் ஒப்படைக்கும்படி அதிகாரிகள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுதவிர, அரசாங்க வாகனங்களை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையை சேர்ந்த ஒரு சில அதிகாரிகள்தான், கூடுதல் வாகனங்களை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த புகார் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் சென்றது. அதன் தொடர்ச்சியாகதான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலமாக வீண் செலவீனங்களை குறைக்க முடியும் எனவும் டெல்லி மாநில அரசு நம்புகிறது.
இதுதவிர, அரசாங்க வாகனங்கள் மற்றும் அரசு பயன்பாட்டிற்காக தனியாரிடம் இருந்து வாடகைக்கு பெறப்பட்ட வாகனங்கள் என அனைத்து வாகனங்களிலும், ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைஸ் பொருத்த நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து எந்த ஒரு வாகனமும், ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைஸ் இல்லாமல் இயங்க கூடாது என அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள், எங்கெங்கு செல்கின்றன? என்பதை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!