டாக்ஸி கார்களில் வேக கட்டுப்பாட்டு கருவியை கட்டாயமாக்கி டெல்லி அரசு உத்தரவு
டெல்லி நகரம் முழுவதும் இயங்கும் வாடகை கார்களில் வேக கட்டுபாட்டு கருவி பொருத்துவதை கட்டாயமாக்கி உள்ளது டெல்லி அரசு
டெல்லியில் இயங்கும் அனைத்து வாடகை மற்றும் டாக்ஸி கார்களில் வேக கட்டுபாட்டு கருவையை பொருத்துவதை கட்டாயமாக்கி டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியில் 2014ம் ஆண்டில் 1622 பேரும் 2015ம் ஆண்டில் 1671 பேரும் விபத்தில் மரணமடைந்துள்ளதாக அந்நகரத்தின் போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவிக்கிறது.
மேலும் இதே ஆண்டுகளில் 16,000 பேர் சாலை விபத்துகளில் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே தற்போது டெல்லி நகரத்தின் அனைத்து கமர்ஷியல் வாகனங்களிலும் வேக கட்டுபாட்டி கருவி பொருத்தப்படவேண்டும் அந்நகர அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் கமர்ஷியல் வாகனங்களுக்கு வேக கட்டுபாட்டு கருவிகளை பொருத்தவேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிக்கையை ஏற்று, இந்த உத்தரவை டெல்லி அரசு பிறப்பத்துள்ளது.

அதன்படி, டெல்லியில் விபத்துகளை தடுக்க வாடகை கார்களுக்கு அதிகப்பட்ச வேகமான 80 கிலோ மீட்டரை அரசு நிர்ணயம் செய்துள்ளது.

கமர்ஷியல் வாகனங்களின் வேக கட்டுபாட்டை கண்காணிக்க வேகத்தை கண்டறியும் கருவிகள் அனைத்து டாக்ஸி மற்றும் வாடகை கார்களில் பொருத்தப்பட்டுள்ளன.

டெல்லி அரசின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு டாக்ஸிக்கான தொழிற்சங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேலும் வேக கட்டுப்பாட்டு கருவிகளை தங்களது டாக்ஸிக்களில் பொருத்தப்போவதில்லை என அறிவித்துள்ளன.

கார்களில் பொருத்தப்படும் வேக கட்டுபாட்டு கருவிகளுக்கான விலை ரூ.10,000. அதிக விலை கொண்ட் ஐதை டாக்ஸி ஓட்டுநர்கள் வாங்க முடியாது எனவும்,

அதனால் மத்திய அரசு இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என டெல்லி டாக்ஸி தொழிற்சங்கத்தில் பொது செயலாளர் ராஜேந்திர் சோனி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்றால், நகரம் முழுவதும் அனைத்து கால்டாக்ஸி ஓட்டுநர்களும் போரட்டத்தில் ஈடுபடுவோம் என ராஜேந்திர் சோனி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








