Just In
- 2 min ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 1 hr ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 7 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 7 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இனிமே இந்த கார்கள் எல்லாம் ரோட்டில் ஓடினாலே வளைச்சு வளைச்சு அபராதம் போடபோறாங்க... என்ன நடக்கபோகுதோ தெரியல
டில்லியில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பிஎஸ் 3 மற்றும் பிஎஸ் 4 டீசல் கார்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.இதன் மூலம் இனி டில்லியில் வரும் அக் 1ம் தேதிக்கு பிறகு டில்லிக்குள் பிஎஸ்6 டீசல் கார்கள் மட்டுமே இயங்கங்கலாம் மற்ற டீசல் வானகங்கள் இயங்க கூடாது, இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்திய தலைநகர் டில்லி எதற்கு பெயர் பெற்றதோ இல்லையோ சமீப காலமாக காற்று மாசுக்கு பெயர் பெற்ற நகரமாக இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக காற்று மாசு கொண்ட பகுதியாக டில்லி இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், அந்நகரங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டில்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகின்றன. இதனால் டில்லி என்சிஆர் பகுதிகளில் இயங்கும் வாகனங்களுக்கான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பாகமாக தற்போது மாநில அரசு மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி டில்லியில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பிஎஸ் 3 மற்றும் பிஎஸ்4 ரக டீசல் கார்கள் எதுவும் இயங்ககூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 ரக வாகனங்கள் மட்டுமே இயங்கலாம் மற்ற வாகனங்கள் டில்லிக்குள் இயங்க அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. மீறி இயங்கினால் அந்த வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
டில்லியில் காற்று தர குறியீடு 450க்கு சென்று விட்டது. இது காற்று மாசு மோசமான அளவில் இருக்கிறது என்பதை குறிப்பதாகும். இந்நிலையில் தற்போது பண்டிகை காலம் நெருங்கிவிட்டது. குறிப்பாக தீபாவளி உள்ளிட்ட விஷயங்கள் வருகிறது. இந்த காலங்களில் காற்று மாசு மேலும் அதிகமாகும் என தெரிகிறது.
இந்நிலையில் தான் இந்த தடையை அரசு அறிவித்துள்ளது. அரசு அடுத்த 5 ஆண்டுகளில் டில்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சிகளை செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 3 கட்டங்களாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில் காற்று மாசுவில் கணிசமான முன்னேற்றம் தென்பட்டது. தற்போது காற்று தர குறியீடு 401 முதல் 405 வரையாக இருக்கிறது.
இந்நிலையில் காற்று மாசுவை கட்டுப்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கையாக டில்லியில் புகை சான்று இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் டீசல்களை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் டில்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி ஸ்டேஷன்களை அமைக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்த வருகின்றனர். அதுவும் முக்கியமாக தேசிய நெடுஞ்சாலைகளில் இதை கட்டமைக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் டில்லியை சுற்றி இயங்கிவரும் கமர்ஷியல் வாகனங்களை கேஸில் இயங்கும் வாகனங்களாக மாற்றவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனால் காற்றமாசு பெரும் அளவிற்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக ஒரு வாகனம் தனது ஆயுள் காலத்தை முடித்துவிட்டால் அதை மீண்டும் பயன்படுத்தால் ஸ்கிராப்பிற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
தற்போது விதிக்கப்பட்ட தடை பிஎஸ்3 மற்றும் பிஎஸ்4 டீசல் கார்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் கார்கள் இயங்கலாம். பழைய டீசல் கார்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான புகையை கக்குவதால் அதிகமான காற்று மாசு ஏற்படும் என்பதை கணக்கில் கொண்டு இந்த தடை கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது டில்லியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமல்ல வெளி மாநிலத்திலிருந்து டில்லிக்குள் வரும் கார்களுக்கும் பொருந்தும்.
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!