Just In
- 3 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 4 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 6 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புல்லட் ரயில்: ம்ஹூம்... நம்ம பக்கம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை?!!
டெல்லி- கோல்கட்டா இடையிலான புல்லட் ரயில் வழித்தடத்திற்கான ஆய்வுப் பணிகள் முடிவடைந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதன் சாரம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நம் நாட்டின் முதலாவது புல்லட் ரயில் மும்பை- ஆமதாபாத் இடையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரு நகரங்களுக்கு இடையிலான புல்லட் ரயில் வழித்தடத்தை அமைப்பதற்கான பணிகள் வரும் செப்டம்பரில் துவங்கப்பட இருக்கிறது.
இரண்டாவதாக, மும்பை- நாக்பூர் இடையில் புல்லட் ரயில் இயக்குவதற்கான திட்டம் ஒப்புதல் பெறுவதற்கான இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லி- கோல்கட்டா இடையிலான புல்லட் ரயில் திட்டமும் உயிர் நடைமுறைக்கு வரும் சாத்தியங்கள் எழுந்துள்ளன.
டெல்லி- கோல்கட்டா இடையில் புல்லட் ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஸ்பெயின் நாட்டை சேர்ந்த INECO,TYPSA மற்றும் ICT ஆகிய மூன்று நிறுவனங்கள் ஆய்வுகளை மேற்கொண்டன. இந்த ஆய்வுப் பணிகள் முடிந்து தற்போது இறுதி அறிக்கை ரயில் வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த அறிக்கையில், டெல்லி- கோல்கட்டா இடையிலான 1,474.5 கிமீ தூரத்துக்கு புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பல முக்கிய நகரங்கள் வழியாக புல்லட் ரயில் பயணிக்கும்.
டெல்லி- லக்ணோ இடையிலான 440 கிமீ தூரத்தை புல்லட் ரயில் ஒரு மணி 38 நிமிடங்களில் கடந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, டெல்லி - வாரணாசி இடையிலான 720 கிமீ தூரத்தை கடப்பதற்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் 12 மணிநேரம் வரை எடுத்துக் கொள்கின்றன. ஆனால், புல்லட் ரயில் இந்த தூரத்தை வெறும் 2 மணி 38 நிமிடங்களில் கடந்துவிடும்.
இந்த வழித்தடத்தில் அதிகபட்சமாக 300 கிமீ வேகம் வரை புல்லட் ரயிலை இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், சராசரியாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்வதற்கு வேக இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி - லக்ணோ இடையிலான பயணத்திற்கு புல்லட் ரயிலில் ரூ.1,980 வரையிலும், டெல்லி- வாரணாசி இடையிலான பயணத்திற்கு ரூ.3,240 வரையிலும் கட்டணமாக நிர்ணயிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரயில் துறையின் பல்வேறு பிரிவுகள் வழங்கிய ஆலோசனைகளும், பரிந்துரைகளும் பரிசீலிக்கப்பட்டு இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், இந்த புல்லட் ரயில் திட்டம் துவங்குவதற்கான கால அளவுகள் சற்று ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.
ஆம். இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி, 2021ம் ஆண்டில் டெல்லி- கோல்கட்டா புல்லட் ரயில் திட்டப் பணிகள் துவங்கினால், வரும் 2029ம் ஆண்டில்தான் புல்லட் ரயில் இயக்குவதற்கான கால அளவு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், டெல்லி- லக்ணோ இடையில் 2029ம் ஆண்டிலும், டெல்லி- வாரணாசி இடையில் 2031ம் ஆண்டிலும் புல்லட் ரயில் இயக்க முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி- மும்பை மற்றும் மும்பை- சென்னை நகரங்களுக்கு இடையிலும் புல்லட் ரயில் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த திட்டப்பணிகள் துவங்கி, புல்லட் ரயில் வருவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும். இதன்படி பார்க்கும்போது, தென் இந்தியாவிற்கு புல்லட் ரயில் என்பது அடுத்த ஒரு தசாப்தத்திற்கு வெறும் கனவாகவே இருக்கும் நிலை உள்ளது.
இவற்றை தவிர்த்து, அரசியல் சூழல்களும் இந்த திட்டத்திற்கான கால அளவை நீட்டிக்கும். எனவே, புல்லட் ரயில் வருவதற்கான வாய்ப்புகள் வெகு தூரத்தில் உள்ளதாகவே கருத முடியும்.
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!