Just In
- 5 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சோனியா காந்தியின் மருமகன் காருக்குள் இருந்தபோது நடந்த பரபரப்பு சம்பவம்... வெயிட் காட்டிய போலீஸ்!
சோனியா காந்தியின் மருமகன் காருக்குள் இருந்தபோது பரபரப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். போக்குவரத்து விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக அவருக்கு டெல்லி காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர். அபாயகரமான முறையில் கார் ஓட்டிய காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என டெல்லி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி காவல் துறையினர் கூறுகையில், ''ராபர்ட் வதேராவின் காருக்கு மோட்டார் வாகன சட்டம் பிரிவு 184-ன் கீழ் (அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது'' என்றனர். சம்பவம் நடந்தபோது, ராபர்ட் வதேரா தனது பாதுகாவலர்களுடன் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவரது காரின் வேகம் திடீரென குறைந்துள்ளது. இதன் காரணமாக பின்னால் வந்த மற்றொரு கார் ராபர்ட் வதேராவின் கார் மீது மோதியுள்ளது. இதுகுறித்து ராபர்ட் வதேரா கூறுகையில், ''இது நிஸாமுதீன் பகுதியில் நடைபெற்ற சாதாரண சம்பவம்தான். எனது கார் வலது பக்கம் திரும்ப முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது.
அப்போது டாக்ஸி டிரைவர் ஒருவர் அந்த வளைவில் திரும்ப தவறி விட்டார். எனவே வளைவில் திரும்புவதற்கு அவர் மீண்டும் ரிவர்ஸ் கியர் போட்டு வந்தார். அந்த நேரத்தில் எனது காரின் ஓட்டுனர் பிரேக் பிடித்து விட்டார். நான் காரை ஓட்டவில்லை. நான் காரின் பின் பகுதியில் அமர்ந்து, லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்ததேன்'' என்றார்.
அதாவது வளைவில் திரும்ப தவறிய டாக்ஸி டிரைவர் மீண்டும் அந்த வளைவில் திரும்புவதற்காக ரிவர்ஸில் வந்தபோது, ராபர்ட் வதேராவின் கார் டிரைவர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது ராபர்ட் வதேராவின் காரின் பின் பகுதியில் டாக்ஸி மோதியுள்ளது. அதிர்ஷ்டவசமாக பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் ராபர்ட் வதேராவின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால், இந்த சம்பவம் செய்தியாகியுள்ளது. ஆனால் பிரபலமான மனிதர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதிப்பது இது முதல் முறை கிடையாது. அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் பலருக்கும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக கடந்த காலங்களில் காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
சாலையில் நாம் வாகனங்களில் பயணிக்கும்போது போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் சரியாக பின்பற்ற வேண்டும். ஆனால் சாலை விபத்துக்கள் என்பது கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்று விடும். எனவே வாகனங்களை ஓட்டும்போது கவனம் சிதறாமல் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் முக்கியமானது.
இது நமக்கு மட்டுமல்லாது, சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் மற்றும் பாதசாரிகளுக்கும் நன்மை விளைவிக்கும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தவறினாலோ அல்லது அலட்சியமாக நடந்து கொண்டாலோ எப்போது வேண்டுமானாலும் சாலை விபத்தில் சிக்க நேரிடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
Note: Images used are for representational purpose only.