Just In
- 1 hr ago கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- 6 hrs ago 35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
- 7 hrs ago மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- 8 hrs ago டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
Don't Miss!
- Technology 75 இன்ச் Haier 4K டிவி அறிமுகம்.. டால்பி ஆடியோ.. 32ஜிபி மெமரி.. விலையை சொன்னா நம்புவீங்களா?
- News உச்சத்தில் தங்கம் விலை, ஆனா இன்னும் முடியல! அடுத்தாண்டு ரூ.10,000க்கு போகும்- ஆனந்த் சீனிவாசன் பகீர்
- Lifestyle Today Rasi Palan 17 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது...
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
இனி உங்களால் தப்பிக்கவே முடியாது: புதிய தொழில்நுட்பத்தை களமிறக்கிய காவல்துறை.. வச்சுட்டாங்களா ஆப்பு!
போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் விதமாக புதிய தொழில்நுட்பம் அடங்கிய கேமிராவைப் பயன்படுத்த இருப்பதாக தலைநகரத்தின் போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாட்டின் பல முக்கியமான பிரச்னைகளில், தலையாய பிரச்னையாக போக்குவரத்து விதிமீறல்கள் பார்க்கப்படுகின்றன. ஆகையால், இதனை முற்றிலும் ஒழித்துகட்டும் விதமாக மத்திய அரசு, அண்மையில் புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம் 2019-ஐ அறிமுகம் செய்தது.
இது, நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இது அமலுக்கு வந்த நாள் முதல் பெரும் பரப்பையும், களோபரத்தையும் ஏற்படத்திய வண்ணம் உள்ளது. இதற்கு, புதிய மோட்டார் வாகன சட்டம் விதிக்கும் உச்சபட்ச அபராதத் தொகையே முக்கிய காரணமாக இருக்கின்றது.
இது, முன்னதாக போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்டு வந்த, அதிகபட்ச அபராதத்தை பத்து மடங்கு உயர்த்தி வசூலிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆகையால், இந்த திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவது குறித்தான பேச்சுவார்த்தையில் ஒரு மாநிலங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம், டெல்லி மற்றும் ஹரியானா போன்ற ஒரு சில மாநிலங்கள் இதனை ஏற்கனவே நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டன.
அவ்வாறு, அது நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து பெரும் பரபரப்பான மற்றும் சுவாரஷ்யமான தகவல்களே அந்த மாநிலங்களில் இருந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதிலும், சமீபத்தில் விதிக்கப்பட்ட உச்சபட்ச அபராதம் குறித்த தகவல் நாடு முழுவதும் காட்டு தீயாய் பரவியது. இதற்கு, விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி லாரி ஒன்றிற்கு வழங்கப்பட்டிருந்த அதிகபட்ச அபராதமே முக்கிய காரணமாக இருக்கின்றது.
அந்தவகையில், உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாதது, பியூசி சான்று இல்லாதது, பெர்மிட் முறைகேடு, காப்பீடு இல்லாதது, மித மிஞ்சி சுமை மற்றும் சீட் பெல்ட் அணியவில்லை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களின் காரணமாக ரூ. 6,53,100-க்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டது. இதுவே இது நாடு முழுவதும் வைரலாகியதற்கு காரணம்.
இவ்வாறு, புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள மாநிலங்களில் போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராக போலீஸார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் புது டெல்லியிலும் விதிமீறல்களை தவிர்ப்பதற்காக சிறப்பு நடவடிக்கை ஒன்றை அம்மாநில காவல்துறை மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில், அதிகவேகமாக செல்லக்கூடிய வாகனங்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் கொண்ட கேமிராவை நகரின் சில முக்கிய சாலைகளில் பொருத்த டெல்லி காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த கேமிராக்கள் அதிகவேகமாக செல்லும் வாகனங்களைக் கண்டறிவது மட்டுமின்றி அந்த வாகனத்தின் பதிவெண்ணை கண்டறிந்து, அபராத செல்லாணை அனுப்பி வைக்க உதவும்.
இத்தகைய திறன் கொண்ட 25 புத்தம் புதிய கேமிராக்களை நகரின் 12 முக்கிய பகுதிகளில் டெல்லி போலீஸார் கடந்த ஞாயிறன்று பொருத்தியுள்ளனர். இது அதிக வேக விதிமீறல் மட்டுமின்றி வேறு போக்குவரத்து விதிமீறல்களையும் கண்டறிய பயன்படும்.
இந்த கேமிராக்கள் தற்போது தேசிய நெடுஞ்சாலை 24ஐ சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த பகுதி மட்டுமின்றி, நகரத்தின் முக்கிய இடங்களான ஐஎஸ்பிடி-ஐடிஓ, பூசா ரோட், தஹுலா-நரைனா, ஜேஎன்யூ பல்கலைக்கழகம், மசூத்பூர், நெல்சன் மண்டேலா சாலை, க்ராண்டி மார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில், ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் கடந்த ஆகஸ்டு மாதத்திலேயே கேமிராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், அவை தற்போதுதான் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
இதுமட்டுமின்றி கூடுதலாக மேலும் சில பகுதிகளிலும் புதிதாக கேமிராக்கள் நிறுவும் பணி தொடங்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த பிரத்யேக தொழில்நுட்பம் அடங்கிய கேமிராக்கள் பொருத்தும் பணி மற்றும் இதற்கான செலவுகளை மாருதி உத்யோக் குழுமம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த செயலை இந்நிறுவனம், சிஎஸ்ஆர் எனப்படும் திட்டத்தின்கீழ் செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது.
புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து நாட்டில் அபராத மழை பொழிந்த வண்ணம் உள்ளது. அதேசமயம், இதன் பாதிப்பாக வாகன ஓட்டிகள் தங்களது சொந்த வாகனங்களுக்கு பதிலாக பொதுவாகனங்களையே போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், போக்குவரத்து விதிமீறல்கள் கணிசமாக குறைந்திருப்பதாக தகவல் கூறப்படுகின்றது.
-
தமிழ் படத்துல நடிச்ச இந்த நடிகையை நினைவிருக்கா!.. புடவையை கட்டிகிட்டு பைக்குல வந்து மனசை கொள்ளையடிச்சுட்டாங்க!
-
31 கிமீ மைலேஜ் தரும் காரை அடிமாட்டு விலைக்கு விற்கும் மாருதி... சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா...
-
வான்வழியை மூடிய 3 உலக நாடுகள்! நேற்று உலகத்தையே பரபரப்பாக்கிய சம்பவம் என்ன தெரியுமா?