Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 8 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரூ.100 கோடி மோசடி... திலீப் சாப்ரியாவின் மகன், சகோதரிக்கும் போலீஸ் வலைவீச்சு!
டிசி அவந்தி கார் விற்பனையில் ரூ.100 கோடி வரை மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளதால், தலைமறைவாக உள்ள திலீப் சாப்ரியாவின் மகன் மற்றும் மகளை மும்பை குற்றப்புலனாய்வு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மும்பையை சேர்ந்த டிசி டிசைன் நிறுவனம் கார்களை கஸ்டமைஸ் செய்து தருவதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருந்து வந்தது. மேலும், டிசி அவந்தி என்ற ஸ்போர்ட்ஸ் கார் மாடலையும் தயாரித்து விற்பனை செய்து வந்தது. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் என்ற பெருமையை இந்த கார் பெற்றது.
இந்த நிலையில், டிசி அவந்தி கார் விற்பனையில் டிசி டிசைன் நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சாப்ரியா மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. இதையடுத்து, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை மும்பை குற்றப் புலனாய்வு போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். இதில், டிசி அவந்தி கார் விற்பனையில் ரூ.100 கோடி வரை திலீப் சாப்ரியா மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, இந்த மோசடியில் தொடர்புடையதாக கருதப்படும் டிசி டிசைன் நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்த திலீப் சாப்ரியாவின் மகன், சகோதரி மற்றும் நிறுவனத்தின் இயக்குனர்களா சொக்கலிங்கம் கதிரவன் மற்றும் சீத்தாராமன் ஆகியோரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும், தலைமறைவாக உள்ள திலீப் சாப்ரியாவின் மகன் போனிட்டோ சாப்ரியா மற்றும் சகோதரி காஞ்சன் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே, டிசி டிசைன் நிறுவனத்தில் இருந்த 14 டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், அங்கு இறக்குமதி செய்து வைக்கப்பட்டு இருந்த 40 கார் எஞ்சின்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
டிசி அவந்தி கார்களை ஒரு மாநிலத்தில் விற்று பின்னர் அந்த காரை போலி பெயரில் தனது நிறுவனத்தின் பெயரில் வாங்கி கடன் பெற்றுள்ளனர். பின்னர், அந்த காரை வேறு மாநில வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.
கடன் மோசடி, ஜிஎஸ்டி வரி மோசடி என மிகவும் திட்டமிட்டு இந்த மோசடிகளில் டிசி நிறுவனத்தின் அதிபர் திலீப் சாப்ரியா ஈடுபட்டுள்ளார். பல கார்கள் மீது வாங்கப்பட்ட கடன்கள் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால், திலீப் சாப்ரியா மீதான பிடி இறுகி இருக்கிறது.
Via- TOI
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?