Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 6 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ.100 கோடி மோசடி... திலீப் சாப்ரியாவின் மகன், சகோதரிக்கும் போலீஸ் வலைவீச்சு!
டிசி அவந்தி கார் விற்பனையில் ரூ.100 கோடி வரை மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளதால், தலைமறைவாக உள்ள திலீப் சாப்ரியாவின் மகன் மற்றும் மகளை மும்பை குற்றப்புலனாய்வு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மும்பையை சேர்ந்த டிசி டிசைன் நிறுவனம் கார்களை கஸ்டமைஸ் செய்து தருவதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருந்து வந்தது. மேலும், டிசி அவந்தி என்ற ஸ்போர்ட்ஸ் கார் மாடலையும் தயாரித்து விற்பனை செய்து வந்தது. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் என்ற பெருமையை இந்த கார் பெற்றது.

இந்த நிலையில், டிசி அவந்தி கார் விற்பனையில் டிசி டிசைன் நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சாப்ரியா மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. இதையடுத்து, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை மும்பை குற்றப் புலனாய்வு போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். இதில், டிசி அவந்தி கார் விற்பனையில் ரூ.100 கோடி வரை திலீப் சாப்ரியா மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, இந்த மோசடியில் தொடர்புடையதாக கருதப்படும் டிசி டிசைன் நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்த திலீப் சாப்ரியாவின் மகன், சகோதரி மற்றும் நிறுவனத்தின் இயக்குனர்களா சொக்கலிங்கம் கதிரவன் மற்றும் சீத்தாராமன் ஆகியோரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள திலீப் சாப்ரியாவின் மகன் போனிட்டோ சாப்ரியா மற்றும் சகோதரி காஞ்சன் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே, டிசி டிசைன் நிறுவனத்தில் இருந்த 14 டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், அங்கு இறக்குமதி செய்து வைக்கப்பட்டு இருந்த 40 கார் எஞ்சின்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

டிசி அவந்தி கார்களை ஒரு மாநிலத்தில் விற்று பின்னர் அந்த காரை போலி பெயரில் தனது நிறுவனத்தின் பெயரில் வாங்கி கடன் பெற்றுள்ளனர். பின்னர், அந்த காரை வேறு மாநில வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

கடன் மோசடி, ஜிஎஸ்டி வரி மோசடி என மிகவும் திட்டமிட்டு இந்த மோசடிகளில் டிசி நிறுவனத்தின் அதிபர் திலீப் சாப்ரியா ஈடுபட்டுள்ளார். பல கார்கள் மீது வாங்கப்பட்ட கடன்கள் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால், திலீப் சாப்ரியா மீதான பிடி இறுகி இருக்கிறது.
Via- TOI